பொன்கொரண்டி தாவரத்துடன் சீனப் பயணி ஒருவர் கைது

25 கிலோ கிராம் பொன்கொரண்டி மூலிகைத் தாவரத்தை சட்டவிரோதமாகச் சீனாவுக்குக் கடத்த முயன்ற 37 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்றைய தினம் அதிகாலை 12.10 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து ஷங்காய் நோக்கிப் புறப்படவிருந்த ‘சீனா ஈஸ்டர்ன்’ நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6018 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையம் வந்திருந்தார். இதன்போது, அவரது நடத்தையில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டனர்.

அவரது பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, மிகவும் சூட்சுமமான முறையில் தேயிலை பக்கெற்றுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 25 கிலோ கிராம் பொன்கொரண்டி மூலிகை பட்டைகள் கண்டறியப்பட்டன. கைப்பற்றப்பட்ட இந்த மூலிகைப் பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பொன்கொரண்டி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தாவரமாகும். இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயல் சுங்கக் கட்டளைச் சட்டத்தையும் சர்வதேச வனவிலங்கு கடத்தல் தடுப்பு விதிகளையும் மீறுவதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரச உடமையாக்கப்பட்டுள்ளதுடன், விமான நிலைய சுங்கப் பிரிவினர் மற்றும் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமை பாதுகாப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

arrest

ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி கைது!

March 22, 2026

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த

schoo

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு; பாடசாலைகளை மூடத் தீர்மானமில்லை!

March 22, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம்

Accident

இரத்தினபுரி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

March 22, 2026

ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Harshana rushan

எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்!

March 22, 2026

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை எக்காரணம் கொண்டும்

air

பொன்கொரண்டி தாவரத்துடன் சீனப் பயணி ஒருவர் கைது

March 22, 2026

25 கிலோ கிராம் பொன்கொரண்டி மூலிகைத் தாவரத்தை சட்டவிரோதமாகச் சீனாவுக்குக் கடத்த முயன்ற 37 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர்

hil

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை

March 22, 2026

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரும் மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய

post

எரிபொருள் நெருக்கடி; தபால் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல்

March 22, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் திணைக்களத்தின் கடிதப் போக்குவரத்து சேவைகளை ஒருநாள்

fazi

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்

March 22, 2026

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின்

kokk

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை கொலை தொடர்பில் வௌியான பல தகவல்கள்

March 22, 2026

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில்

hu

ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ​ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படும்!

March 22, 2026

அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை

d

ஊரெழுவில் பதுக்கி வைத்த எரிபொருள் மீட்பு

March 22, 2026

யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான எரிபொருட்கள், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்

dd

செம்பியன்பற்று வடக்கு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

March 22, 2026

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் நேற்று (21) மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்