பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள “பாதுகாப்பான வதிவிட காணித்தேவை ” மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இணைந்து செயற்பட தயார். நமது மலையக சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இதற்கு முன் நடைபெற்ற அவலங்களை விட இந்த முறை அவலம் அவதானத்துக்கு உரியது என நான் நம்புகிறேன். ஏறக்குறைய பெரும்பாலான மலை பகுதிகளிலும் மலை பாறைகள், மலை மேடுகள், தரை நிலங்கள் வெடித்து உள்ளன.

இடைவெளிகளில் நீர் வெளியேறுகின்றன. இது இயற்கை அனர்த்தம். சிலர் கூறுவதை போன்று இவற்றை கொங்ரீட் போட்டு ஓட்ட முடியாது. இவை இயற்கை நில வெடிப்பு.

மலைநாட்டில், மலை உச்சி, மண் சரிவு அபாயங்களை உடனடியாக எதிர் கொள்ளும் பிரிவினர் இருக்கிறார்கள். இவர்களின் பிரச்சினை, சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப பிரச்சினை. இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் அவசரமாக கோருவோம்.

இது தொடர்பில் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கவுடன் நான் கடந்த வாரம் நேரடியாக நாடாளுமன்றத்தில் உரையாடி உள்ளேன்.

பாதீட்டின் இறுதி நாளன்று, எதிர்கட்சிகளுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யாமல், ஜனாதிபதியின் உரையை செவி மடுத்தேன். இனிமேல் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களிலேயே குடியமர்த்த-படுவார்கள் என அவர் சபையில் தன உரையில் கூறியதை நேரடியாக பாராட்டி, அதே அவகாசம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதன் பின், நமது எம்பீக்களும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக கருத்து கூறி ஜனாதிபதியின் கவனத்துக்கு, காணி பிரச்சினையை மீண்டும் கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே, இன்று இது தேசிய பிரச்சினையாக மாறு உள்ளதை இனிமேல் எவரும் மறுக்க முடியாது.

பேரவலத்தை அடுத்து, நான் பல இடங்களுக்கு எனது கட்சி குழுவினருடன், நிவாரண பொருள் உதவிகளுடன், கண்காணிப்பு பயணங்கள் மேற்கொண்டேன்.

நான் போன பல இடங்களில், கண்டி நாவலபிட்டிய கங்க-இஹல-கோரள-அலுகொல்ல மலை உச்சி தோட்டம், மிகவும், ஆபத்து நிறைந்த பூமியாக என் மனதில் நிற்கிறது.

அங்கே அனாதரவாக இருந்த மக்களுக்கு, நாம் விநியோகித்த, உடனடி நிவாரணத்தை பெற்று கொண்ட அவர்கள் தம் வாழ்விட பரிதாப நிலையை எனக்கு கூறினார்கள்.

நான் அந்த மலை உச்சியில் மலையேறி நடக்கும் போதே, என் கால்களுக்கு கீழே, தரை பிளந்து, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளியே வருவதை என் கண்களால் கண்டேன்.

மீண்டும் ஒரு மழையோ, மண் சரிவோ வருமானால், கீழே உருண்டு வர தயாராக இருக்கும், பாறைகளையும், உயர்ந்த மண்மேடுகளையும், கண்டேன். இதை விட என்ன பரிதாபம் இருக்க முடியும்?

பாதுகாப்பான மாற்று காணிகள் இவர்களுக்கு வழங்க பட வேண்டும். அதுவும் அவசரமாக முன்னுரிமை அடிப்படையில் நடைபெற வேண்டும்.

ஆகவே, அரசியல் கட்சி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பேதங்களுக்கு அப்பால் இந்த விடயத்தில் நாம் ஒன்று பட்டு செயற்பட்டு, நமது சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம் என்றார்.

Arrest

சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது!

December 15, 2025

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் பெய்து

po

மொன்றியல் காவல்துறை கண்காணிப்பை அதிகரிப்பு

December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஹனுக்கா (Hanukkah) பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, மொன்றியல் காவல்துறை யூதச் சமூகக்

kam

அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு கம்பவாரிதி இ. ஜெயராஜ் நன்கொடை

December 15, 2025

அனர்த்த நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் நன்கொடையாக ஒரு தொகை

ca

கனடாவில் நிரந்தர குடியுரிமை; அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

December 15, 2025

கனடாவில் நிரந்தர வதிவிடத்தை எதிர்பார்போருக்கு அரசாங்கம் முக்கிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 6,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட

re

’ஏகே 64’ படத்தில் இணையும் பிரபல நடிகை

December 15, 2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல

san

மீண்டும் சினிமாவில் ’காதல்’ பட நடிகை

December 15, 2025

கடந்த 2004-ம் ஆண்டு வெளியான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய

na

மண்சரிவால் அழிந்த ஒரு வீட்டு உரிமையாளரிடம் மீட்ட நகைகள், பணத்தை ஒப்படைத்த படையினர்!

December 15, 2025

ஹங்குரான்கெத்த பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை இராணுவப் படையினர், மண்சரிவால் வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு வீட்டு உரிமையாளரிடம்

hare

இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் ; ஹரின் பெர்ணான்டோ

December 15, 2025

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான உறுதியான தகவல்களை அறிந்துகொள்ளவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயவும் அரசாங்கம் இரண்டு நாள்பாராளுமன்ற

ae

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யவுள்ளதாக அறிவிப்பு

December 15, 2025

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றுக்கு இன்று திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளது. அதிக விலை

vad

வட மாகாணத்தில் திடீரென ஒன்றுகூடிய கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்

December 15, 2025

இந்திய தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்த கடற்தொழிலாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஒட்டு மொத்த வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின்

crim

காலை உணவவாக புட்டு தயாரிக்குமாமாறு கோரிய கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி

December 15, 2025

காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன்

r

காலி மாநகர சபையில் சிவப்பு பலூன்களை வெடித்து: பட்ஜெட் தோற்கடிப்பு

December 15, 2025

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம்