இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் ; ஹரின் பெர்ணான்டோ

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான உறுதியான தகவல்களை அறிந்துகொள்ளவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயவும் அரசாங்கம் இரண்டு நாள்பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டு 18 நாட்கள் கடந்துள்ளபோதும் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பீட்டு தொகையை உறுதியாக தெரிவிப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்ட 25ஆயிரம் ரூபா தொகையே இன்னும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை வழங்குவதிலும் ஒருசில பகுதிகளில் அது அரசியலாக்கப்பட்டுள்ளது. அதனால் 25ஆயிரம் ரூபா கிடைக்கப்பெறாத மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையில் விரக்தியடைந்துள்ளனர்.

அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்த 5மில்லியன் கோடி ரூபாவை எவ்வாறு அரசாங்கம் வழங்கப்போகின்றது.? அத்துடன் இடம்பெற்ற அனர்த்தத்தினால் நாடுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பில் நிதி அடிப்படையில் அதன் மதிப்பீடு என்ன? இந்த விடயங்களை அறிந்துகொள்ளவும் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கத்துக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கவும் தெரியாத தகவல்களை அறிந்துகொள்ளவும் அரசாங்கம் விரைவாக பாராளுமன்றத்தை கூட்டி, ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் இரண்டு நாள் விவாதம் ஒன்றுக்கு எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

ஏனெனில் இம்பெற்ற அனர்த்தத்தில் மொத்தமாக எத்தனை வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன என்ற உண்மையான தகவல் யாருக்கும் தெரியாது. அதனால் ஊடகங்கள் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் நாளுக்கு நாள் முரண்பட்ட எண்ணிக்கையை தெரிவித்து வருகின்றன.

உண்மையான தகவல் தெரியாமர் இருப்பதாலே இவ்வாறு மாறுபட்ட எண்ணிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன. அதனால் பாராளுமன்றத்தை கூட்டி, அனர்த்தம் தொடர்பில் பூரண தெளிவொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்.

2003ஆம் ஆண்டு இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் 24ஆயிரம் வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன. சுமார் 50ஆயிரம் வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்தமுறை இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகும். என்றாலும் 6ஆயரம் வீடுகளே முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதனாலே பாராளுமன்றத்தை கூட்டி இதுதொடர்பில் விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கிறோம்.

அதேநேரம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, நத்தார் தாத்தா போன்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் தொகையை அறிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான வழியை அமைத்துக்கொண்டார். தற்போது வேறு கதைகளை தெரிவித்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நட்டஈட்டு தொகையை வழங்குவது என அரசாங்கத்துக்கு தெரியாமல் இருப்பதே இதற்கான காரணமாகும் என்றார்.

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்