வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) பகுதியில், ஏழு வயது சிறுமி ஓட்டிய ‘ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்side-by-side vehicle இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஆல்பர்ட்டா எல்லைக்கு அருகில் உள்ள ‘பூஸ் கூப்’ (Pouce Coupe) கிராமப்புறப் பகுதிக்கு வெளியே உள்ள ஒரு சாலையில், ஜூன் 4 அன்று மதியம் 1 மணிக்குப் பிறகு இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் (Mounties) தெரிவித்துள்ளனர்.
“வாகனத்தை ஓட்டியவர் கட்டுப்பாட்டை இழந்தபோது, அதில் ஐந்து சிறு குழந்தைகள் இருந்தனர். இதனால் அந்த வாகனம் கணிசமான தூரத்திற்கு பலமுறை தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது,” என்று ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் எட்டு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், வாகனத்தை ஓட்டிய ஏழு வயது சிறுமி பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தில் இருந்த மற்ற மூன்று குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் ஜோர்டான் பூலின் (Jordan Poulin – 8) மற்றும் ஜெய்டின் பாரெட் (Jadyn Barrett – 7) என அவர்களது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான பொது நினைவஞ்சலி கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை அருகில் உள்ள டாசன் கிரீக் (Dawson Creek) பகுதியில் நடைபெற உள்ளது.
இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஆஃப்-ரோடு வாகனச் சட்டத்தின்படி (B.C. Off-Road Vehicle Act), 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயணிகளுடன் ‘சைடு-பை-சைடு’ அல்லது அதுபோன்ற வாகனங்களை ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் வாகனத் தயாரிப்பாளரின் குறைந்தபட்ச உயரம் மற்றும் எடைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் ஒரு பெரியவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதும் விதியாகும்.
“ஒரு பெற்றோராக, இந்த குடும்பங்கள் சந்தித்துள்ள கற்பனை செய்ய முடியாத, துயரமான இழப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை,” என்று பி.சி. ஆர்.சி.எம்.பி (B.C. RCMP சார்ஜென்ட் கிரிஸ் கிளார்க் (Kris Clark) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.