கிஸ்தான் பெண்கள் அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை ஏற்கெனவே கைப்பற்றியிருந்த இலங்கை பெண்கள் அணி, தற்போது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரையும் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த இலங்கை, தம்புள்ளயில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பெண்கள் அணியின் தலைவி முனீபா அலி, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஷவால் ஸுல்பிகாரின் 48 (35), முனீபா அலியின் 45 (30), எய்மன் பாத்திமாவின் ஆட்டமிழக்காத 30 (19), எமன் நசீரின் 21 (21), சைரா ஜபீனின் 16 (09) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் சமுதி பிரபோதா 4-0-27-2, கவிஷா டில்ஹாரி 4-0-29-1, சாமரி அத்தப்பத்து 4-0-32-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 176 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, சஞ்சனா காவிந்தியின் 46 (24), அணித்தலைவி சாமரி அத்தப்பத்துவின் 40 (15), ஹர்ஷிதா சமரவிக்கிரமவின் ஆட்டமிழக்காத 37 (22), விஷ்மி குணரத்னவின் 31 (29), கவிஷா டில்ஹாரியின் ஆட்டமிழக்காத 14 (08) ஓட்டங்களோடு 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் உம்-ஈ-கனி 4-0-28-2, மொமினா றியாசட் 3-0-22-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகியாக காவிந்தி தெரிவானார்.