பத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற விதத்தில் விடுதலை செய்யுங்கள் – ஜனாதிபதிக்கு கடிதம்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்தபடி தமிழ் அரசியல் கைதிகள் பத்துபேரையும் ஜனாதிபதி உடனடியாக நிபந்தனையற்ற விதத்தில் விடுதலை செய்யவேண்டும் என 300க்கும் மேற்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்களும் தனிநபர்களும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் அரசியல் கைதிகளின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் ஒன்றாகும். அவசரகாலச் சட்டம் மற்றும்/அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் நூற்றுக்கணக்கான அரசியல் மாற்றுக் கருத்தாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு, காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

1970கள் மற்றும் 80களில் இடம்பெற்ற ஜே.வி.பி (JVP) கிளர்ச்சிகள் முதல், 30 ஆண்டுகால இன மோதல், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் அநியாயமாக இலக்கு வைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது வரை, மற்றும் மிகச் சமீபத்தில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் (அரகலய) வரை – மாற்றுக் கருத்துக்களையும் அரசியல் எதிரிகளையும் நசுக்குவதற்கு அரசாங்கம் ‘பயங்கரவாதச் சட்டங்களையும்’ அவசரகால விதிமுறைகளையும் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியிருக்கும் 10 நீண்டகால தமிழ் அரசியல் கைதிகளில் (சுருக்கமான வழக்கு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன), ஆகஸ்ட் 2009 இல் கைது செய்யப்பட்ட செல்வராஜா கிருபாகரன் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகியோரின் வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இது அவர்களின் வாழ்க்கையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பே சிறைக்குள் கழிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
அவர்கள் தங்களின் முழு இளமைப் பருவத்தையும், முதிர் பருவத்தின் பெரும் பகுதியையும் விசாரணைகளுக்காகக் காத்திருப்பதிலேயே இழந்துள்ளனர். எஞ்சிய எட்டு கைதிகள் தண்டனை பெற்றிருந்தாலும், அவர்களும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களில் இருவர் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருப்பதுடன், பொலிஸார், சிறை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் கொடூரமான சித்திரவதைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ளனர். மேலும், தன்னிச்சையான தாமதங்கள் மற்றும் நடைமுறை குறைபாடுகளாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, நல்லிணக்கத்திற்கான ஒரு செயலபாடாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடியும், இவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களினதும் மற்றும் கைதிகளினதும் ஏகோபித்த கோரிக்கையாகும்.

இந்த நடவடிக்கை முன்னுதாரணம் இல்லாதது அல்ல. 1977 ஆம் ஆண்டு நவம்பரில், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, குற்றவியல் நீதிக் ஆணைக்குழு (CJC) சட்டத்தின் கீழ் (இது 1971 ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களை விசாரிக்கப் பயன்படுத்தப்பட்டது) தண்டனை அனுபவித்து வந்த அனைத்து ஜே.வி.பி உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு அறிவித்தார். அரச ஒடுக்குமுறையை நேரடியாக அனுபவித்த இந்த அரசாங்கம், தமது வாழ்நாளில் பாதியை சிறைக்குள் கழித்த எஞ்சியிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளையும் இதேபோன்ற முறையில் நிபந்தனையின்றி விடுதலை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேற்கூறிய உண்மைகளின் அடிப்படையில், ஜனாதிபதியிடம் நாம் பின்வருவனவற்றை கோருகிறோம்:

நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிக்கு உண்மையாகவும், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தல்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட ஏனைய அனைத்து பயங்கரவாதத் தடைச் சட்டக் கைதிகளின் வழக்குகளையும் மீளாய்வு செய்து விரைவுபடுத்துதல், மற்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தல் அல்லது நிபந்தனையின்றி விடுதலை செய்தல்.

சுமார் 15 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு நியாயமான மற்றும் விகிதாசார இழப்பீடுகளை வழங்குதல்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக நீக்குதல் மற்றும் அதுவரை அச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு உடனடி தடையை (Moratorium) விதித்தல்.

முன்மொழியப்பட்டுள்ள அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (PSTA) மீளப் பெறுதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக எந்தவொரு புதிய பயங்கரவாதச் சட்டங்களையும் அறிமுகப்படுத்த மாட்டோம் என உறுதியளித்தல்.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு