நோர்த் யார்க் மோதல் சம்பவத்தின் பின்னர் கொலைக் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பெண் கைது

நோர்த் யார்க் (North York) பகுதியில் நபர் ஒருவர் மீது வாகனம் மோதிய மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த ஜூன் 14ஆம் திகதி காலை 6 மணியளவில் கீல் வீதி (Keele Street) மற்றும் வில்சன் அவென்யூ (Wilson Avenue) பகுதிக்கு அருகில் நிகழ்ந்துள்ளது.

அப்பகுதியில் ஒரு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட போது, டொராண்டோவைச் சேர்ந்த 32 வயதுடைய எரிக் சபார் (Erik Safar) என்பவர் தாக்கப்பட்டு, அவர் மீது வாகனம் மோதியதாகப் பொலிஸார் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். சம்பவ இடத்திலேயே அவருக்கு அவசர உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் கொலைச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஹமில்டனைச் சேர்ந்த 18 வயதுடைய மிலன் ஆண்ட்ராஸ் பாபோஸ் (Milan Andras Babos) மற்றும் டொராண்டோவைச் சேர்ந்த 23 வயதுடைய ரிச்சர்ட் ஓலா (Richard Olah) ஆகியோர் பொலிஸாரிடம் சரணடைந்ததுடன், அவர்கள் இருவர் மீதும் இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

இருப்பினும், இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய டொராண்டோவைச் சேர்ந்த 25 வயதுடைய ஜெனிபர் ஓலா (Dzsenifer Olah) என்ற பெண்ணையும் தலாங்கள் தேடி வருவதாகக் கடந்த வாரம் பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தனர்.

திங்கட்கிழமை காலை வெளியிடப்பட்ட புதிய தகவலின்படி, ஜெனிபர் ஓலா கடந்த வார இறுதியில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (Second-degree murder) சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“இந்த விசாரணைக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்குப் புலனாய்வாளர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்” எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்

whats

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

June 30, 2026

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த

f

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

June 30, 2026

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற

Fuel_1200px_22_10_17

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

June 30, 2026

இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

eiff

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

June 30, 2026

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

manoga

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

June 30, 2026

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Pol

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் ஆராய்வு

June 30, 2026

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதால், சிறைபிடிக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்கிரமரத்ன எனும் ‘ஹரக்

ff

புதிய அரசியலமைப்பு; இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினை கூட்டாக முன்வைக்கத் தீர்மானம்

June 30, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரித்தல் மற்றும்