நேபாளத்தில் பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு?

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக கடந்த மாதங்களில் நேபாளம் கடுமையான அரசியல் பதற்றத்தை எதிர்கொண்டது. இந்த போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் நிலைமை கட்டுக்குள் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த பின்னணியில், பிரதமர் பதவியில் இருந்த கே.பி. சர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நாட்டின் நிர்வாகத்தை தற்காலிகமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த சில மாதங்களாக இடைக்கால நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்றது. தேர்தலில் நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.

ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராப் பாடகராகவும் சமூக ஊடகங்களில் பிரபலமானவராகவும் அறியப்படும் பாலேந்திர ஷா களமிறங்கினார். கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு எதிராக நடைபெற்ற இளைஞர் போராட்டங்களில் இந்தக் கட்சி முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுவதுடன், 110 உறுப்பினர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், தேர்தலில் வெற்றி பெற்று பாலேந்திர ஷா நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு அமைந்த பின்னர் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

jaf un

ஊடக கற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்

March 7, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்

mid

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து அவசரக் கூட்டம்!

March 7, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை

heat wa

நாட்டில் நிலவும் வெப்பம் குறித்து கடுமையான எச்சரிக்கை

March 7, 2026

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல்

Srilankan air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து?

March 7, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில

no

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி!

March 7, 2026

வடக்கின் 119ஆவது சமரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிரடியாக வெற்றி பெற்றது. யாழ். மத்தியின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) ஆரம்பித்து

arre

போதைப்பொருளை தடுக்கும் தேசிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1,073 பேர் கைது!

March 7, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை

ff

கசிப்புடன் இளைஞர் கைது!

March 7, 2026

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனைப் பகுதியில் 28,500 மில்லி லீற்றர் (28.5 லீற்றர் ) கசிப்புடன் 26

mazooth

பிராந்திய நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

March 7, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி

nep

நேபாளத்தில் பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு?

March 7, 2026

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை

ban

தெஹ்ரானில் அமைந்துள்ள கமேனியின் பிரம்மாண்ட நிலத்தடிப் பதுங்கு குழி அழிப்பு

March 7, 2026

தெஹ்ரானில் அமைந்துள்ள ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவருக்குச் சொந்தமான இரகசிய ‘நிலத்தடி பதுங்கு குழி’ ஒன்றை தாம் அழித்துள்ளதாக இஸ்ரேலிய

padd

பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள குற்றவாளி பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீடு மீது துப்பாக்கிச் சூடு

March 7, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பட்டுவத்தே சாமர என்பவரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு

thaya

சுரேஷ் சாலேவை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி

March 7, 2026

பொலிஸ் அறிக்கை ஒன்றை எடுத்து வராத எந்த நபருக்கும், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)