நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தித்வா நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான முறையான விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை உடனடியாக உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்துவதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட 24 இலட்சம் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமீபத்திய சூறாவளி இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 7 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 24 இலட்சம் தனிநபர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 6,088 வீடுகள் முழுமையாகவும், 18,000 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தினால் 670 பேர் உயிரிழந்துள்ளதோடு, 155 பேர் காணாமல் போயுள்ளனர். உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, சுமார் 4.1 பில்லியன் டொலர் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்ட பின்னரும், அரசாங்கத்தின் நிவாரணப் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன. நிவாரணப் பணிகள் தாமதமாவதற்கு அரச அதிகாரிகளின் திறமையின்மையே காரணம் என அரசாங்கம் காட்ட முயல்கிறது. ஆனால், உண்மையில் இது அதிகாரிகளின் தவறு அல்ல, அரசாங்கத்தின் பலவீனம், திறமையின்மை மற்றும் முறையான திட்டமிடல் இல்லாமையே ஆகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் போன்றவர்கள் குறைந்த வசதிகளுடனேயே பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இக்கட்டான சூழலில் தங்களை அர்ப்பணித்துச் செயல்படும் இவர்களின் மன உறுதியைச் சிதைக்கும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது.

நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான முறையான விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை உடனடியாக உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். ஊடகங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்துவதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட 24 இலட்சம் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான உண்மையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு உரிய வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம