நாட்டில் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் அல்ல – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

நாட்டில் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே தவிர அரசியல் பழிவாங்கல்கள் அல்ல. கடந்த காலங்களில் குறிப்பிட்ட அரசியல் வர்க்கத்தினருக்கும், ஆதாரவாளர்களுக்கும் சட்டம் தன் கடமையை செய்ய தவறியதாக குற்றச்சாட்டுகள் காணப்பட்டன. அத்தகைய நிலைமை தற்போது மாற்றப்பட்டுள்ளது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தெரிவித்ததாவது,

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்று முக்கிய கைது நடவடிக்கைகள், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அல்ல. கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் வர்க்கத்தினருக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியதாகவும், அதன் காரணமாகவே பாதாள உலகக் குழுவினரின் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் அரசியல் பின்னணியுடன் தொடர்ந்து நீடித்து வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போது அந்த நிலைமை மாற்றப்பட்டு, பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல், நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுத்தல், பாதாள உலகக் குழுவினருக்கு உதவுதல் மற்றும் அரச வங்கிகளில் கடன்களைச் செலுத்தாமல் ஏமாற்றுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடுமின்றிச் சட்டம் கடுமையாகப் நடவடிக்கைகளை எடுகக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையின் சொத்துக்களை யாராவது முறைகேடாகப் பெற்றிருந்தால், அவர்கள் அவற்றை இப்போதே சரிசெய்துகொள்ள வேண்டும்.

குறித்த கைதுகளை எதிர்க்கட்சிகள் அரசியல் பழிவாங்கல் என்று விமர்சிப்பது உண்மைக்கு புறம்பானது. நாட்டின் கடந்த கால வரலாற்றை மக்கள் மறந்துவிடவில்லை. கடந்த 1983 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்தவை, அதற்குப் பின்னர் சுமார் 70,000 இளைஞர்கள் பழிவாங்கப்பட்டமை, அரசியல் ரீதியாக முரண்பட்ட அரச அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அன்றைய அரசியல் அமைப்பிற்கு எதிராகச் செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டமை ஆகியவையே உண்மையான பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆகும்.

தற்போது அரசாங்கத்திற்கு இவர்களால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 3 இல் இருந்து 11 ஆக உயர்த்தி, தேவையான அதிகாரிகளை நியமித்து சட்ட அமுலாக்க நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதால், சட்டம் தனது கடமையைச் சுயாதீனமாகச் செய்கிறது. இதனை பொதுமக்களும் ஒரு சாதாரண விடயமாகவே கருதுகின்றனர்.

மேலும், நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்று கூறுமுடியாது. கடந்த ஒன்றரை வருடங்களாக கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவகிறது.

டெங்குவில் உள்ள 4 மாறுபாடுகளில் தற்போது பரவி வரும் குறிப்பிட்ட ஒரு மாறுபாடு தீவிர காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறான பாதிப்பு அதிகரிப்பு ஏற்படுவது வழக்கம் என்பதால், தற்போது பதிவுகள் அதிகமாக உள்ளன. பிரதமரின் தலைமையின்கீழ் கொழும்பு மாவட்டத்தில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையைப் பேண பொதுமக்களும் உள்ளூராட்சி மன்றங்களும் அரசாங்கத்துடன் இணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வெறும் குப்பைகளை அகற்றுவதுடன் மாத்திரமன்றி, நாட்டின் பிரதான பிரச்சினைகளாகக் காணப்படும் கால்வாய்கள் மற்றும் குப்பை முகாமைத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பில்லியன் கணக்கிலான நிதியைப் பயன்படுத்தி, கொழும்பு மத்திய போக்குவரத்து மத்திய உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தின் பலனைப் பொதுமக்கள் நேரடியாக அனுபவித்து வருகின்றனர் என்றார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது