நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை?

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி அமைச்சும் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் ஒரு விதமான விளக்கமும், பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மற்றுமொரு விதமான விளக்கங்களையும் முன்வைத்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு இந்த இந்த நிதி மோசடி தொடர்பிலான உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய கடன் தரப்பாளியாக வேடமிட்ட போலி நபராலா அல்லது உத்தியோகபூர்வ அவுஸ்திரேலிய கடன் தரப்பாளிகளாலா அல்லது நமது நாட்டு இலங்கை பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் அல்லது வெளிநாட்டு வெளி வளங்கள் திணைக்களத்தாலா ? யாரின் தவறு காரணமாகவா இந்த சம்பவம் இடம்பெற்றது என்பதை அறிய வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இந்த விவரங்களை, இது சார்ந்த தகவல்களை நாட்டிற்கு முறையாக தெரிவிக்க தற்போதைய அரசாங்கத்தால் இதுவரையிலும் முடியாது போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டம், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேன, நா உயனே அரியதம்ம தேரரின் 87 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான புண்ணிய நிகழ்வு இன்று (24) விகாரை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்றதன் பிற்பாடு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி ஜனவரியிலேயே இந்த பிரச்சினை கண்டறியப்பட்டு பல மாதங்கள் இரகசியமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுவதால், ஜனவரியில் கண்டறிந்தும் மார்ச் வரை விசாரணைக் குழுவை ஏன் நியமிக்காமல் இருந்தீர்கள் என்ற பெரும் கேள்வி எழுகிறது.

இந்த தகவல் வெளியாகும் வரை நிதி விடயங்களில் முக்கிய பொறுப்பை கொண்ட பாராளுமன்றத்திற்கு இந்த மோசடி குறித்து ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பது மிகப் பாரதூரமான பிரச்சினையாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனில் ஜயந்த பிரதி அமைச்சர் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் போதும் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பின் உண்மைத்தன்மையை அரசாங்கம் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அவுஸ்திரேலிய அரசுடனான கொடுக்கல் வாங்கல்களின் போது நேர்ந்தது போலவே இந்தியாவுடனான கொடுக்கல் வாங்கல்களிலும் பணம் இழக்கப்பட்டிருந்தால் இதன் உண்மைத் தண்மையை நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும். பல மாதங்களாக இந்த விடயத்தை மறைத்து வைத்ததுக் கொண்டிருந்தது ஏன் என்பது பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இது மிகப் பாரதூரமான செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நடந்த மோசடி சம்பவம் மிகவும் பாரதூரமானது. நமது நாடு பல இறையாண்மைப் பொறுப்புகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ள ஒரு நாடாகும். இந்த பொறுப்புகளை நிறைவேற்றும்போது ஒரு நாடாக, ஒரு அரசாங்கமாக, நிதி அமைச்சாக வினைத்திறனற்ற முறையில் நடந்து கொண்டால், நாட்டைப் பற்றி சர்வதேசத்திற்கு மோசமான செய்தியே செல்லும்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகள், தொழில் முயற்சியாண்மைகள், பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிக்கும் பேச்சுகளுக்கு இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு நாடாக சர்வதேசத்தில் எமக்கு இடமிருக்காது. இதனால் நாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை உலகிற்கு எம்மால் முன்வைக்க முடியாமல் போகின்றன. முதலீட்டு ஊக்குவிப்புக்கு இது தடையாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வெளிப்படையான விசாரணை சபையை நியமிப்பது இங்கு அரசாங்கத்தின் கடமையாக காணப்படுகின்றன. சர்ச்சைக்குரிய மோசடி நடந்த நிறுவனம், அதன் அதிகாரிகளை நியமித்து விசாரணை நியாயமாக நடத்த முடியாது. ஆகையினால் உண்மையான வெளிப்படையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி இது தொடர்பாக எடுக்கும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும். இந்த மோசடி திருட்டால் இந்த அரசாங்கம் இயலுமையற்ற அரசாங்கம் என்பது நிரூபணமாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் சைபர் பாதுகாப்பையே உறுதிப்படுத்த முடியாவிட்டால் நாட்டின் ஏனைய பாதுகாப்பு மற்றும் ஏனைய சைபர் பாதுகாப்புகள் தொடர்பில் நினைத்துப் பார்க்க முடியுமா? இந்நிலையில் ஜனாதிபதி உண்மையை பேச வேண்டும். இந்த சம்பவம் அரசாங்கத்தின் இயலாமையையும், வினைத்திறனில்லாத தன்மையையும், செயலற்ற தன்மையையும் நாட்டிற்கே காட்டிவிட்டது. ஆளும் தரப்பினர் பிரஸ்தாபித்த ஸ்மார்ட் ஆட்சிக்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் இயலாமை மிக்க ஆட்சியையே நடத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

719852590_10242235868731525_4126836530523673060_n

சொல்லிசை பாடகரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

June 10, 2026

சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன்னை உடனடியாக விடுதலை விடுதலை செய்யுமாறு கோரியும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் இன்று

5XLYI5BEFJCEVNM63BGIUWFOPU

பி.சி (B.C.) பகுதியில் வாகனம் கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் பலி, 3 பேர் காயம்

June 10, 2026

வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) பகுதியில், ஏழு வயது சிறுமி ஓட்டிய ‘ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்side-by-side vehicle

canada bank gover

பொருளாதார மந்தநிலை (Recession) என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்’: கனடா வங்கி ஆளுநர்

June 10, 2026

கனடா வங்கியின் (Bank of Canada) ஆளுநர் டிஃப் மேக்லம் (Tiff Macklem), இதுவரை தாம் பார்த்த தரவுகளின்படி, நாட்டின்

4CLOLKCC2FG3RAQOW6ITDCPJGY

வடக்கு ஒன்டாரியோவில் கொல்லப்பட்ட பிராம்ப்டன் OPP அதிகாரி தருண் பாலி: நாம் அறிந்தவை

June 10, 2026

செவ்வாய்க்கிழமை மதியம் வடக்கு ஒன்டாரியோவில் பணியின் போது கொல்லப்பட்ட ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) அதிகாரி தருண் பாலி, பிராம்ப்டனைச்

court-judge-hammer-gavel-696x398

அரசு வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த விவகாரம்: விமல் வீரவன்சவின் சகோதரருக்கு வெளிநாட்டு பயணத்தடை

June 10, 2026

அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத்

Screenshot_20260610_143451_Instagram

போலி கனடா கடவுச்சீட்டு மூலம் லண்டன் செல்ல முயற்சி: தாய்லாந்து விமான நிலையத்தில் இலங்கை நாட்டவர் கைது

June 10, 2026

தாய்லாந்து தலைநகர் பேங்காக் அருகே உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில், போலி கனடா நாட்டு கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தி

721089767_10242010452096412_6680718909023026465_n

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு இன்று(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது

June 10, 2026

குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். குரு நகர் ஆலய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலி

dailythanthi_2026-06-10_7scngxem_Untitled-11

“10, 12-ம் வகுப்பில் மாஸ் காட்டிய மாணவர்களுக்கு ரூ.72 லட்சம் ஊக்கத்தொகை!” – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

June 10, 2026

சென்னை ‘சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 2,090 பேருக்கு ரூ.72.03 லட்சம்

kizhakkunews_2025-10-29_bqqnv4dz_CTR-NirmalKumar (1)

“மின்தடையை ஏற்படுத்தி தவெக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த இமாலய சதி!” – 125 அதிரடி ரோந்து வாகனங்களைத் தொடங்கி வைத்து அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கக் குற்றச்சாட்டு!

June 10, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் எவ்வித மின்சாரத் தட்டுப்பாடும் துளியும் இல்லை; ஆனால், ஆங்காங்கே வேண்டுமென்றே செயற்கையான மின்தடையை ஏற்படுத்திப்

che

21ஆம் நாள்; செம்மணி மனிதப் புதைகுழியில் 12 என்புத் தொகுதி புதிதாக அடையாளம்

June 10, 2026

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 12 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 7

image_a55b9f0e51

முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா ஜூன் 12 வரை விளக்கமறியலில்

June 10, 2026

கொழும்பு: தென் மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷான் விஜயலால் டி சில்வா, கொழும்பு பிரதம நீதவான்

doctor11

பெர்த்தில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: இலங்கை மருத்துவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

June 10, 2026

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், அக்குபஞ்சர் (Acupuncture) சிகிச்சையின் போது பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை