யாழ்ப்பாணம்- நவாலி வீதியில் கன்டர் ரக வாகனமும் தனியார் போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(7.3.2026) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பேருந்தும், யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கன்டர் ரக வாகனமும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.