தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தற்காலிக நிவாரணமே

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாகும் எனவும் முன்னாள் அமைச்சரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் கொட்டகலையில் அண்மையில் இடம்பெற்ற ‘மலையக வாழ்வுரிமை மாநாட்டில்’ கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

“மலையக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தமிழ் முற்போக்கு கூட்டணியே முன்னெடுத்துள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எங்களுக்குக் கிடைத்த நான்கு ஆண்டுகளில் உட்கட்டமைப்பு மற்றும் உரிமை சார்ந்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். ஆனால், அக்காலகட்டத்தில் எங்களைச் கடுமையாக விமர்சித்தார்கள். நான் வீடுகளைக் கட்டியபோது அவற்றை ‘குருவிக்கூடு’ என்று எள்ளி நகையாடினார்கள். காணிப் பத்திரங்களை வழங்கியபோது, அவை சட்டரீதியானவை அல்ல என்று கூறினார்கள். எதிர்க்கட்சியில் இருந்தபோது விமர்சித்தவர்கள், இன்று ஆட்சிக்கு வந்து என்ன செய்துள்ளார்கள்?

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது, 4,000 இந்திய வீடுகளை நிறைவு செய்வதாக அமைச்சர் சமந்த வித்தியாரத்ன உறுதியளித்திருந்தார். ஆனால், அது இன்னும் நடக்கவில்லை. எமது காலத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 4,000 வீடுகளையும், இலங்கை அரசாங்கத்தின் நிதியில் மேலதிகமாக 4,000 வீடுகளையும் நிர்மாணித்து, அவற்றுக்கான காணி உரிமைகளையும் மக்களுக்கு வழங்கினோம்.

கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் அன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் எங்களைக் கடுமையாகச் சாடியிருப்பார்கள். ஆனால், தற்போது இந்தச் சம்பவம் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? இது குறித்து நீதியான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியமாகும்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் அரச நிதியை வழங்க முன்மொழிந்தபோது, நாம் மக்களுக்காக அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். அதையும் விமர்சிப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது. அரசாங்கம் வழங்கியுள்ள இந்த 200 ரூபாய் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஒரு சம்பள உயர்வுப் போராட்டம் தேவைப்படும்.

எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வாகத் தொழிலாளர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும். இதையே நாம் தற்போதைய அரசாங்கத்திடமும் வலியுறுத்துகின்றோம். சஜித் பிரேமதாசவின் எதிர்கால ஆட்சிக் காலத்தில் இதனைச் செயற்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

Ravika

தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள்; அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிதைகிறது – ரவிகரன்

March 9, 2026

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி

evu

234 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன – குவைத்

March 9, 2026

குவைத்தில் நேற்று இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து 234 ஏவுகணைகள் மற்றும் 422 ட்ரோன்களை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

akku

அக்குரணையில் தீ

March 9, 2026

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குரணை, 7ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாடக் காட்சி அறை ஒன்றில் நேற்று

mes

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தொடர்பான அறிவிப்பு

March 9, 2026

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள்

kug

யாழில் லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாவுக்கு ஏப்ரலில் கட்டளை

March 9, 2026

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய

ir

பதற்றம் உச்சம்; ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டு வீச்சு

March 9, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள்

wi

மக்களின் பல விடயங்களைப் பாதிக்கும் மதுபானசாலைகளுக்கு எதிராகப் போராட்டம்

March 8, 2026

குடும்பங்களின் அமைதி பொருளாதாரம் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்களை பாதிக்கும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு

wi

வீடொன்றில் சூட்சுமமாக பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த பெண் கைது

March 8, 2026

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். வீடொன்றில் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டு

Anthonysil

வாகனங்கள் மண்ணெண்ணெய்யில் ஓடுவதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

March 8, 2026

மட்டக்களப்பில் டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணெய்யில் ஓடுகின்றதனால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி

vaal

வவுனியாவில் வாள்வெட்டு; இருவர் காயம்

March 8, 2026

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(7.3.2026)

ssss

இலங்கையில் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத கால இலவச விசா

March 8, 2026

இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் இலவச விசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஈரானியக்

wo m

தமிழ்ச் சங்கத்தின் “சர்வதேச மகளிர் தினம்”

March 8, 2026

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் “சர்வதேச மகளிர் தினம்” 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை நிகழ்வாக சங்கரப்பிள்ளை மண்டபத்தில்