தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன் முறையாக தேர்தல் களத்தை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கொள்ள உள்ளது.வீட்டில் இருந்து அரசியல் செய்கிறார், அறிக்கை அரசியல் என வைக்கப்பட்ட விமர்சனத்தை உடைக்கும் வகையில் மக்கள் சந்திப்பை விஜய் முன்னெடுத்தார். கடந்த ஆண்டு கரூர் சம்பவம் முதல் ஜனநாயகன் தணிக்கை சான்று வரை தொடர்ந்து வழக்குகளில் சிக்கி வருகிறார்.

இது அவருக்கு நெகட்டிவாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அதனை தகர்த்தெறியும்படி இருந்தது தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம். தொடர்ந்து மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார் விஜய்.இதற்கிடையே, கட்சித் தொடங்கிய போது தவெகவுடன் கூட்டணி அமைத்தால்,ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று கூறினார். இதில், விசிக இணையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குண்டை தூக்கி எறிந்தது. இதனால், திமுக அதிர்ச்சி அடைந்தது. மறுப்புறம் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.

இதனால், திமுகவை விட்டு வெளியேறி காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சொன்ன போலிட்டிகல் பார்ம் வொர்க்காமல் போனது. இதனால் விஜய் போட்டு இருந்த கூட்ட்ணி கணக்கும் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில்,விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, ஒட்டு மொத்த தமிழகத்தின் பார்வை விஜய் மீது.காரணம் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறியது.இது அவரது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னை நடந் த பிரபல தயாரிப்பாளர் நிகழ்ச்சில் விஜய் கலந்துக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

.இதனால்,சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்லைவர்கள் மற்றும் நடிகை கருத்து தெரிவித்து வந்த நிலையில், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனும் கூறியிருந்ததார். இது பேசுப்பொருளானது. இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :நடிகர் விஜயின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. அதேபோல் அவரது அரசியல் வருகை பற்றியும் நான் கருத்து தெரிவிக்கவில்லை.

விஜயை நான் மரியாதையுடன் நடந்து கொள்கிற, அமைதியான இணை நடிகராக மட்டுமே அறிந்திருக்கிறேன். மேலும் அவரது தாயாரைப் பற்றியும் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உள்ளது. எனக்கு தெரிந்த தகவல் அதுவரை மட்டுமே.

சமீபத்தில் நான் மேடையில் பேசிய சில வரிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவை விஜயின் அரசியல் வருகையுடனும் தற்போது அவரது தனிப்பட்ட விஷயங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளிதழ் என்னிடம் கருத்து கேட்டபோது, தனிப்பட்ட விஷயங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் மக்கள் தனித்தனியாக புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்றும், தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயத்திற்கு தேவைக்கு மீறிய கவனம் கிடைக்கிறது போல தெரிகிறது என்றும் மட்டுமே நான் கூறினேன்.

மேலும் ஒரு விஷயத்தைச் சேர்த்துக் கூற விரும்புகிறேன். பெண்களின் உரிமைகள் குறித்து உண்மையாகவே அக்கறை இருந்தால், சமூகத்தில் இன்னும் பல பெண்கள் வன்முறை மற்றும் அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு சட்ட உதவி, பொருளாதார பாதுகாப்பு, சில நேரங்களில் அன்றாட உணவுக்கூட இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கும் நம்முடைய கவனமும் ஆதரவும் சம உரிமை கிடைக்க வேண்டும்.எனவே, எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் தவறான புரிதலை சரிசெய்யவும் இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

Dau

வடக்கு ஒன்டாரியோ சுரங்கத் திட்டம்; சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கூடுதல் தரவு தேவை?

March 8, 2026

வடக்கு ஒன்டாரியோவில் உள்ள Ring of Fire சுரங்கத் திட்டம் கூட்டாட்சி அல்லது மாகாண அரசுகளால் அதிகாரப்பூர்வமாக விரைவுபடுத்தப்படவில்லை. இருப்பினும்,

ott

விமர்சனத்துக்குள்ளாகியுள்ள ஒட்டாவாவின் “நிலைத்தொழில்கள் செயல் திட்டம்”

March 8, 2026

கனடாவில் எனர்ஜி துறையில் உள்ள வேலைகளை பாதுகாக்கும் நோக்கில் பிரதமர் மார்க் கார்னி அரசு வெளியிட்ட திட்டம், வேலை இழக்கும்

iris

IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு குணமடைந்த 22 மாலுமிகள் விமானப்படை முகாமிற்கு மாற்றம்!

March 8, 2026

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை

viam

மன்னாரில் பெண்களுக்கு இடையூறு விளைவித்த இ.போ.ச. காப்பாளருக்கு தண்டனை

March 8, 2026

மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) காப்பாளருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள்

arrest

செங்கலடி பிரதான வீதி வர்த்தக நிலைய திருட்டு; ஒருவர் கைது

March 8, 2026

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி – பதுளை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற

mu

நொச்சிமுனையில் முகத்தில் யானை மிதித்ததில் குடும்பஸ்தர் பலி

March 8, 2026

மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய சோமசுந்தரம் அரிச்சந்திரன் என்பவர், சின்னப்புல்லுமலை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்த

thiga

தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தற்காலிக நிவாரணமே

March 8, 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே

ne

நியூகாசிலை வீழ்த்தி காலிறுதியில் சிற்றி

March 8, 2026

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது. விலகல் முறையிலான இத்தொடரில்,

van

செங்கலடியில் வண்டுகளுடன் உணவு: உணவகத்திற்கு சீல்

March 8, 2026

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட

va

வளைகுடா எடுத்துள்ள அதிரடி திட்டம்

March 8, 2026

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு வரவு

lax

தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

March 8, 2026

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

vi

உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

March 8, 2026

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை