தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் 1 200 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு!

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட, ரூ. 1,200 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய 650 கிலோ கிராம் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகின் உரிமையாளரான பெண்ணும், அவரது மகனும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை பகுதியில் பதுங்கியிருந்த போதே இவ்விருவரும் கடந்த 16-ம் திகதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட படகின் மாலுமி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தத் தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தொகுதியை கடத்துவதற்காக படகு மாலுமிக்கு மட்டும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பாரிய கடத்தலின் பின்னணியில் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘அங்கோட பிரியங்கர’ மற்றும் ‘தினூக’ ஆகியோரே செயற்பட்டுள்ளனர். கடத்தல் பணிகளை ‘பரேவி சுதா’ என்பவர் ஒருங்கிணைத்துள்ளார்.

விசாரணைகளின்படி, அங்கொட பிரியங்கரவுக்கு சொந்தமான 1,000 கிலோ கிராம் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை ‘பரேவி சுதா’ பொறுப்பேற்றிருந்தார். இதில் முதற்கட்டமாக 320 கிலோ கிராம் போதைப்பொருள் சில மாதங்களுக்கு முன்பு மிரிஸ்ஸ கடற்கரையில் வைத்து கைப்பற்றப்பட்டது.

இந்த சுற்றிவளைப்புக்கு ஒற்றுக் கொடுத்தவரின் தலையைத் துண்டித்து, பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கே அனுப்ப அங்கொட பிரியங்கர திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. எனினும், அந்தப் பணியை ஏகப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதால் அந்தச் சதி முறியடிக்கப்பட்டது.

பேருவளை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட 250 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி ரூ. 1,200 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ‘தினூக’ என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.ஒரு கிலோ கிராம் கொக்கெய்ன் சுமார் 4.5 கோடி ரூபாய் பெறுமதியானது.

இலங்கையிலுள்ள சில செல்வந்தர்களே இந்த கொக்கெய்ன் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த போதைப்பொருள் தென் அமெரிக்க நாடொன்றிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தலுக்குத் துணைபோகும் படகு உரிமையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

lit

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

March 18, 2026

சந்தையில் தற்போது போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,

Bib

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்புக்கு எதிர்ப்பு

March 18, 2026

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண

drone

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவது குற்றம்

March 18, 2026

இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (Drones) இயக்குவது தண்டனைக்குரிய குற்றம் எனவும், இது தொடர்பான சட்ட விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும்

AL

புத்தாண்டுக்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்…

March 18, 2026

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

sh

எரிவாயு விநியோகம் குறித்து புதிய அறிவிப்பு

March 18, 2026

திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் இன்று காலை (18) நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, எரிவாயு

vasa

சவாலான தீர்மானங்கள் குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்

March 18, 2026

நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைச் சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன்

st

இரு அரச பேருந்துகள் மோதியதி விபத்து; நால்வர் பலி – 40 பேர் படுகாயம்

March 18, 2026

அம்பலந்தொட்ட – கதிர்காம பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவன பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக

muni

மறு அறிவிப்பு வரும் வரை உடன் நடைமுறைக்கு வரும் திட்டம்

March 18, 2026

கொழும்பு நகரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது.

e

இலங்கை தொழில் திணைக்களத்தின் சேவை மாற்றம்

March 18, 2026

இலங்கை தொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஊழியர் சேமலாப நிதி பிரிவின் சேவை மாற்றம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

no

வடகொரிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவு

March 18, 2026

957ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வடகொரிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி உள்ளதை அந்நாட்டு அரசு ஊடகங்கள்

ddd

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு

March 18, 2026

இலங்கையின் கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், 6ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்ட மாற்றங்களை 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் தயாராக

sene

சம்பியனாக மொராக்கோ

March 18, 2026

தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரின் சம்பியன்களாக மொராக்கோ பிரகடனப்படுத்தப்பட்டதுடன், செனகலின் பட்டமானது தொடரின் இறுதிப் போட்டி தொடர்பான மேன்முறையீட்டையடுத்து ஆபிரிக்க