சிறைச்சாலைக் கைதிகள் மோதல்: விசாரணைகளுக்காக விசேட குழு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்குமிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோதலில் சிக்கி இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 கைதிகள் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் கடுமையான காயங்களுக்குள்ளான இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலையிலிருந்த கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறி எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதிலிருந்து கீழே விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த கைதிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கமலத்கே, சுமார் 10 கைதிகளுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டதுடன், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்டு, அதிகாரிகள் தங்களுக்குத் சரியான தகவல்களை வழங்கவில்லை எனக் கூறி பதற்றமாக நடந்துகொண்டனர்.

எனினும், பொலிஸார் தலையிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்கியதோடு, உறவினர்கள் சிலரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் சிகிச்சை பெற்று பல்லன்சேன முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் மொத்தம் 2,417 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சிறைச்சாலையின் உள்சூழ்நிலை சிறைச்சாலை அதிகாரிகளினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், சிறைச்சாலையின் வெளிப்பாதுகாப்பிற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இது கைதிகளுக்கு இடையிலான ஒரு மோதல் மாத்திரமே தவிர, இதில் அதிகாரிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, கைதிகளின் உறவினர்கள் இந்த நேரத்தில் வீண் பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இச்சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் ஒத்துழைப்புடன் சிறைச்சாலையின் உள்நிலவரத்தை சுமுக நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. கைதிகள் தங்களது சில கோரிக்கைகளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளதுடன், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் அந்த இடத்திலேயே கைதிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

1200-675-27270261-thumbnail-16x9-ramesh

“பெற்ற மகனையே முறையாக வளர்க்காத மு.க. ஸ்டாலின், கட்சியை ஒழுங்காக நடத்துவார் என எதிர்பார்க்க முடியாது!” – அமைச்சர் ரமேஷ் சாடல்

September 14, 2026

திருச்சி: ஆர்ப்பாட்டங்களில் திமுகவினர் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதே அக்கட்சியின் டி.என்.ஏ (DNA) என்றும், முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ மு.க. ஸ்டாலின்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

“அஜித் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!” – அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி

September 14, 2026

தூத்துக்குடி: லண்டனில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் சந்திப்பு குறித்தும், சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் தொடக்க விழா

1200-675-25470070-thumbnail-16x9-admk-aspera

“இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்!” – அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

September 14, 2026

வேலூர்: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நேர்மையான முறையில் செயல்பட்டு வருவதாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடன் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அவர்

tvk-bus-2

சேலத்தில் தவெக கொடி நிறத்தில் புதிய அரசுப் பேருந்துகள்: போக்குவரத்துத்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 14, 2026

சேலம்: சேலம் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசுப் பேருந்துகளுக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி

HSJq4ica8AAcl1E

அஜித் – விஜய் சந்திப்பு: தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் இங்கிலாந்தில் நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார்

27628648_anand

“தவெகவில் இணைய ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை!” – மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளர் மரகதம் குமரவேல் விளக்கம்

September 14, 2026

மதுராந்தகம்: தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலின்

vinayagar (1)

ரூ. 25 லட்ச மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சி ஏலேல சிங்க விநாயகர்!

September 14, 2026

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய

elmore

செம்மணி மனித புதைகுழி அகழ்வை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – நம்பகதன்மை மிக்க விசாரணை அவசியம் -பிரிட்டன்

September 14, 2026

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து சர்வதேசதராதரத்திலான நம்பகதன்மை மிக்க வெளிப்படையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என இலங்கையிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாக பிரிட்டன்

Shiranthi-Rajapaksa 1

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி துஷ்பிரயோகம்: சிறாந்தி ராஜபக்ஷவிடம் எஃப்பிஐடி விசாரணை நடத்த தீர்மானம்

September 14, 2026

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டீ ஸ்கேனர் (CT scanner) இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய

Namal-750x422

விமானங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி – நாமல் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

September 14, 2026

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் பொதுஜனபெரமுன

202606093819488

“எந்தத் துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்ட விளக்கம்

September 14, 2026

திருநெல்வேலி: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், துண்டுச் சீட்டு மூலம் வந்த உத்தரவுக்கே சபாநாயகர் அடிபணிந்தார் என்ற

srilanka un peace keeping

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்புவதற்கு முன்னர் அவர்களின் கடந்காலங்கள் குறித்து நன்கு ஆராய்ந்தோம் – இராணுவ பேச்சாளர்

September 14, 2026

ஹைட்டி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இயங்கும் வன்முறைக் கும்பல் தடுப்புப் படையில் (GSF) இலங்கை அமைதி காக்கும்