சிறைச்சாலை படுகொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ; அரசியல் இலாபம் தேட நான் தயாரில்லை : நாமல் ராஜபக்ஷ

சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்களும் அதிகாரிகளின் படுகொலைகளும் அரசாங்கத்தின் புலனாய்வுப்பிரிவின் பலவீனம் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது. இதற்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனினும், உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பெற்றோர்களின் வேதனையைப் பயன்படுத்தி இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை அரசியல்மயமாக்கவோ அல்லது அரசியல் இலாபம் தேடவோ தான் தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒபேசேகரபுர பிரதேசத்தில்  வியாழக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற விளம்பரத்திற்காக இளைஞர்களைக் காரணம் ஏதுமின்றி சிறைகளில் அடைத்து வருகிறது. சிறையிலுள்ளவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களுக்குச் சிறைத்தண்டனைக்கு பதிலாக முறையான புனர்வாழ்வே அளிக்கப்பட வேண்டும். 11,000 பேர் மட்டுமே இருக்கக்கூடிய சிறைகளில் 45,000 பேரை அடைத்து வைத்துள்ளதோடு, 3,000 கைதிகளைக் கண்காணிப்பதற்கு வெறும் 180 அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புப் பலவீனமடைந்துள்ளது.

சிறைக்குள் இவ்வளவு பெரிய மோதல் வெடிக்கும் வரை அரசாங்கத்தின் உளவுத்துறை என்ன செய்தது? சம்பவத்தின் போது உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படாமைக்கான காரணம் என்ன? தங்களுக்கு எவ்வித உத்தரவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் அமைச்சரின் முகத்திற்கு நேராகவே கூறுகின்றனர். அத்துடன், இந்தச் சம்பவம் நடந்து 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரை அரசாங்கம் ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருந்தது என்ற நியாயமான சந்தேகம் தமக்கு எழுகிறது.

பின்தங்கிய சூழ்நிலையையும் சமூக நெருக்கடியையும் பயன்படுத்தியே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அதே போன்றதொரு சமூக அனர்த்தத்தையும் மக்கள் மீதான அழுத்தங்களையும் இவர்கள் மீண்டும் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்களா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த

den

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

July 27, 2026

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும்

sajith-2

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

July 27, 2026

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

arrest

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

July 27, 2026

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது