கேப்பாபுலவு பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்கள் ; ஆளுநரிடம் அவசர கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக இன்று (24) புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மாற்றுக்காணிகளை தாம் ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது எனவும் தாம் அப்படி எந்த மாற்றுக் காணிகளையும் ஏற்கப் போவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட மாகாண ஆளுநர் நேரில் வருகை தந்து மக்களின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதோடு, வாழ்விடப் பிரச்சினைக்கு உடனடியான சாதகமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கேப்பாபுலவு பூர்வீக மக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

171 ஏக்கர் காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தின் 59 ஆவது காலால் படைப்பிரிவினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே எமது காணிகளை விடுவிக்க கோரி இன்றிலிருந்து தொடர் போராட்டமாக இந்தப் போராட்டத்தினை தாம் முன்னெடுக்க போவதாக மக்கள் தெரிவித்ததுடன் கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்கு முன்பாக அடையாள உண்ணாவிரதத்தில தொடர்ந்து இன்றுமுதல் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த கேப்பாபுலவு மக்கள், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் துறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

“போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் மக்களின் காணிகள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 17 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் குடியேற முடியாமல் தவித்து வருகிறோம். எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் எமது வளங்களை பயன்படுத்துகிறது. ஆனால் நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது எந்த வகையிலும் நியாயமல்ல” என மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தின் போது வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, எம் மண்ணில் நாம் உழைக்க வேண்டும் எம் உரிமையை நீ தர வேண்டும் இராணுவமே வெளியேறு, முகாம்களை மூடு நிலங்களை விடு, நில ஆக்கிரமிப்பை நிறுத்து, ஜனாநாயக அல்லது இராணுவ ஆட்சியா?, எமது வாழ்விடம் எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

நீண்டகாலமாக தீர்வு காணப்படாத காணி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே கேப்பாபுலவு மக்களின் பிரதான கோரிக்கையாகும்.

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட

hindutamil-prod_2026-08-08_ozeaw6pt_mutharasan

“கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக த.வெ.க. அரசு செயல்படுகிறதா?” – முதலமைச்சருக்கு முத்தரசன் கேள்வி!

August 24, 2026

கும்பகோணம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன்,

images (9)

“தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – 10,000 ஏரிகள் வறண்டதால் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

August 24, 2026

சென்னை தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டுள்ளதைக் சுட்டிக்காட்டி, உடனடியாகத் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க

vck-tvk

“ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாகிறதா த.வெ.க?” – விசிக சரமாரி கேள்வி!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஊழல் பின்னணி கொண்டவர்களைத் தங்கள் கட்சியில் இணைத்து வருவதாகக்

images - 2026-08-24T175653.807

“3 கோப்புகளை ஒரு வாரத்திற்குள் முதலமைச்சர் வெளியிட வேண்டும்!” – துரைமுருகன் அதிரடி சவால்!

August 24, 2026

வேலூர் வேலூர் காட்பாடி காந்திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், த.வெ.க.வினரின் விமர்சனங்களுக்கும், முதலமைச்சர் விஜய்யின்

collage-1755054530

“வகுப்பறை முதல் ஆய்வகம் வரை!” – அரசுப் பள்ளிகளின் ரூ.4,200 கோடி உள்கட்டமைப்புத் தேவைகள் பட்டியல் வெளியீடு!

August 24, 2026

சென்னை அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராகத் தரம் உயர்த்தும் நோக்கில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்

Ex0nP5VXEAEUsfN

1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகள் மின்பதிவாக்கம்: இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு முயற்சி!

August 24, 2026

மதுரை தமிழகக் கோவில்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட மன்னர் காலக் கொடைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய அரிய ஓலைச்சுவடிகளை வருங்காலத்

Edappadi-Palaniswami-KA-Sengottaiyan

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் விரைவில் த.வெ.க.வில் இணைவார்கள்!” – அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்புப் பேச்சு!

August 24, 2026

கோபி ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை

1

“சென்னையில் 750 புதிய மின்சார பஸ்கள்!” – முதலமைச்சர் விஜய் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்!

August 24, 2026

சென்னை சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 2-ஆம் கட்டமாக 750 புதிய தாழ்தளக் குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் (AC