கியூபெக்கில் பிரெஞ்ச் தேர்வில் 1 மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் இக்கட்டில் ஒரு குடும்பம்

கியூபெக்கில் குடியேறியதிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வாரம் தங்கள் பட்டமேற்படிப்பு முடிந்த பின் வழங்கப்படும் வேலை அனுமதி (post-graduation work permit) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், உடனடியாக வேலைகளை விட்டு விலக வேண்டியதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அந்த கொலின் சில்வா என்பவர் தெரிவித்துள்ளார்.

கொலின் சில்வா கும்பத்தினர் சிறந்த வாழ்க்கையை நாடி மெக்சிக்கோவை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் கனடா பற்றியும் அதன் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு மனப்பான்மை கொண்ட நாடு என்பதையும் பற்றி அதிகமாக அறிந்ததால் கியூபெக் வந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உடலியல் சிகிச்சை (physiotherapy) துறையில் கல்வி பெற்ற கொலின் சில்வா, லாவல் பல்கலைக்கழகத்தில் எர்கோனாமிக்ஸ் (ergonomics) துறையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழித் தகுதிகள், முன் நிபந்தனைப் பாடநெறிகள் ஆகியவற்றை நிறைவேற்ற நீண்ட கால முயற்சியில் ஈடுபட்டார்.

“மூன்றாவது மொழியில் முதுகலைப் பட்டம் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது. நான் ஆங்கிலமும் ஸ்பானிஷும் பேசுகிறேன்; ஆனால் பிரெஞ்சில் முதுகலைப் படிப்பது பெரிய சவாலாக இருந்தது. ஆனால் நான் அதைச் சாதித்தேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த மே மாதம் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, பல ஆண்டுகளாக ஏற்பட்ட மன அழுத்தத்திற்குப் பின்னர் இறுதியாக நம்பிக்கை ஏற்பட்டதாக கொலின் சில்வா தெரிவித்தார். தனது துறையில் வேலை கிடைக்காத நிலையில், இரண்டு பள்ளிகளில் குழந்தைகள் பராமரிப்பு சேவைகளில் பணியாற்றத் தொடங்கினார்.

ஜனவரி 26 அன்று, பட்டமேற்படிப்பு முடிந்த பின் வழங்கப்படும் வேலை அனுமதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் அறிந்தார். மாகாணத்தில் இரண்டு வேலைகளை செய்து வந்த அவரது கணவரும் உடனடியாக வேலை நிறுத்த வேண்டும் என்றும், விரைவில் மெக்சிக்கோவுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குடியேற்ற ஆலோசகர் தெரிவித்தாக குறிப்பிட்ட கொலின் சில்வா இந்த அனுமதிக்கு தகுதி பெற விண்ணப்பதாரர்கள் பிரெஞ்சு மொழித் தேர்வின் நான்கு பகுதிகளில் தேர்ச்சி பெற வேண்டும். மூன்று பகுதிகளில் குறைந்தபட்ச மதிப்பெண்ணை விட அதிகமாகப் பெற்றிருந்தாலும், எழுத்துத் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண் 427 மட்டுமே என அவர் கூறினார். குறைந்தபட்ச தேவையான மதிப்பெண் 428. ஒருபுள்ளி குறைந்ததால் தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது என்றார்.

மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு இருந்தாலும் அதற்கான செலவு நூற்றுக்கணக்கான டாலர்கள் ஆகும் என்றும்இ அந்தச் செலவை தங்கள் குடும்பம் தாங்க முடியாத நிலை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“என்னை வரவேற்ற கனடாவைப் பற்றி தவறாக பேச விரும்பவில்லை. ஆனால் இது மிகவும் மனிதாபிமானமற்றதாக எனக்கு தோன்றுகிறது,” என்று அவர் கூறினார். “நாங்கள் குப்பை போல நடத்தப்படுகிறோம்.”

குடியேற்ற வழக்கறிஞர் மேக்சிம் லாப்புவான் கூறுகையில் இந்தப் பிரச்சினை கொலின் சில்வாவுக்கு மாட்டுமன்றி பல மக்கள் எதிர்கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

2023 முதல், மாகாண மற்றும் மத்திய அரசுகள் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாகாணத்தில் குடியேறுவது மேலும் கடினமாகும் சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.

“காலப்போக்கில் புதிதாக வரும் குடியேற்றவர்களுக்கான வாயில்கள் மெதுவாக மூடப்பட்டன. இதனால் தற்போது இங்கே உள்ள சிலர் இனி தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது