காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினரும் பல தடவைகள் என்னிடம் முறைப்பாடு முன் வைத்தனர். இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும் நான் பல தடவை கூறியுள்ளேன் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இன்று(26.03.2026) காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விதமான அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் மக்களது பிரச்சினைகளும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள நீலங்காடு காணி பிரச்சினை, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் தொடர்பான பிரச்சனைகள், குழாய்வழி குடிநீர் பிரச்சினை, பாடசாலைகளின் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காரைநகர் பிரதேச செயலர், திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், கடற்படையினர், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா கருத்து தெரிவிக்கையில், அந்த வைத்தியசாலையை தரம் உயர்த்தும் போது அங்கே பணி நியமன திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

அதாவது எத்தனை வைத்தியர்கள் இருக்க வேண்டும், எத்தனை தாதியர்கள் இருக்க வேண்டும், எத்தனை ஊழியர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு வந்தால் தான் நாங்கள் சுகாதார உத்தியோகத்தரை கேட்கலாம்.

நாங்கள் அது குறித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வைத்தியசாலை 24 மணித்தியாலமும் இயங்க வேண்டும் என்றால் ஆகக் குறைந்தது எட்டு தாதியர்கள் அங்கே பணியாற்ற வேண்டும்.

ஆக அதற்குரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும். நாடளாவிய ரீதியில் எல்லா வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை காணப்படுகிறது. ஆகவே அதனை நிவர்த்தி செய்த பின்னர் இந்த வைத்தியசாலையை இயங்க வைப்போம் என்றார்.

Vaal veddu

வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்; யாழ்.பண்ணையில் சம்பவம்!

March 26, 2026

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(26.03.2026) இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட

sara

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயைக் கைது செய்தமை தேசத்துரோக செயல்

March 26, 2026

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள்

jail

முல்லைத்தீவு- மந்துவில் பகுதியில் 56 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: ஐவர் கைது

March 26, 2026

முல்லைத்தீவு- மந்துவில் பகுதியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களும், சில

Andra

ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து: 14 பேர் உடல் கருகிப் பலி

March 26, 2026

ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது.

jud

2002ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐவர் கொலை வழக்கில் இருவருக்கு மரண தண்டனை!

March 26, 2026

2002ஆம் ஆண்டு தனமல்வில பகுதியில் இடம்பெற்ற ஐவர் கொலைச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கும் மொனராகலை

Thiru

கலஹா பாடசாலைக்கு திருவள்ளூவர் சிலை அன்பளிப்பு!

March 26, 2026

மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை அமைப்பின் மூலமாக, கண்டி – கலஹா, தெல்தோட்டை குறுப் திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு திருவள்ளுவர் சிலை

Cr

இந்தியா செல்லும் இலங்கை அணி

March 26, 2026

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் இந்தியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. குறித்த தொடருக்கான அட்டவணையை

DRO

நாளை முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

March 26, 2026

ளை (27) முதல் மறு அறிவித்தல் வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொது மக்கள் சேவையினையும்

kalla

மட்டு.கல்லடிப் பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

March 26, 2026

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் சடலமொன்று மிதப்பதைக்

Arju

நாடாளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனா இராமநாதன் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதி வாதத்திற்கான திகதி அறிவிப்பு

March 26, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான

Hu

இஸ்ரேலால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கடற்படை தளபதி யார்?

March 26, 2026

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப்

iran ai

ஈரான் வான்பரப்பில் போர் விமானத்தை நோக்கி ஏவுகணை

March 26, 2026

ஈரானின் ஓமன் வளைகுடா கடற்கரையில் உள்ள சாபஹார் (Chabahar) நகருக்கு அருகே, போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தும் முயற்சி