காத்திரமாக அமைந்த செம்மணி எழுச்சி – அணையா தீபம்; விழித்தெழு தமிழா!

BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு நேற்று பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் கனடா ALBERT CAMPBELL SQUARE இல் நடைபெற்றது.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் நினைவாகவும், நீதிக்காகக் காத்திருக்கும் குடும்பங்களின் குரலாகவும் ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ – ‘விழித்தெழு தமிழா!’ மிகுந்த காத்திரமாக நடைபெற்றது.

எம்மினத்துக்காகக் குரல்கொடுப்பதற்கு கனேடிய மண் மேடை கொடுத்தமைக்கு நன்றி கூறியபடி ஆரம்பமாகிய நிகழ்வில்

செம்மணி என்பது வெறும் மண்ணல்ல… பல குடும்பங்களின் வலியான வரலாறு!

காணாமற் போன எம் உறவுகள் குறித்த உண்மைகள் வெளிவரவேண்டும் என்ற எம்மினத்தின் ஆறாத வலிகள், தேடல்கள், காத்திருப்புக்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மௌனித்த வார்த்தைகள்… என எல்லாவற்றுக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாகப் பதிலைப் பெற்றுத் தரவே இன்று நாங்கள் கூடியுள்ளோம் என்ற செய்தி மற்றும் ‘அன்னைத் தமிழீழ மண்ணே” என்ற தாயகப்பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

BEHIND ME MEDIA தற்போது நடாத்திக் கொண்டிருக்கும் நீதிக்கான போராட்டத்தின் அடையாளச் சின்னமாகவுள்ள செம்மணி மனிதப் புதைகுழிக்கு பதிலைக் கேட்கும் அணியில் நாங்களும் இணைந்து கொள்கின்றோம் என்பதோடு தமிழர் நலன் குறித்த சகலரும் ஓரணியாகத் திரள வேண்டும் எனவும் நிகழ்வில் உரையாற்றிய பிரமுகர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ரொறண்டோ மேயர் பதவி வேட்பாளரும் நீண்ட கால கனேடிய அரசியல் பிரமுகருமான பிராட் பிராட்பேர்ட் மற்றும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஷல்மா ஜாஹித் ஆகியோர் வருகை நிகழ்வுக்கு வலுச் சேர்த்திருந்தது. அவர்கள் தமது உரைகளில் கனேடிய தமிழர்களால் தமது இனத்துக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் மேற்படி போராட்டத்திற்கு பக்க பலமாகவும் உறுதுணையாகவும் தானும் தனது கட்சியும் தொடர்ச்சியாக பயணிப்போம் என்றும். சர்வதேச நீதியைப் பெறுவதில் எமது பங்கும் பெரிதாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்கள்.

உலகளாவிய ரீதியிலான ஆதரவுக் குரல்களோடு நடைபெற்ற மேற்படி விழித்தெழு தமிழா! நிகழ்வில் செம்மணி மனிதப் புதைகுழிப் பேரவலமே எம்மினத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசினால் நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கான சாட்சியாக உள்ளதை நாம் மறக்கக் கூடாது என்றும் நிகழ்வில் உரையாற்றியவர்கள் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

செம்மணியில் இலங்கை இராணுவத்தால் வயது பேதமின்றி எமது மக்கள் மீது நடாத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை மீளவும் கண்முன்னே கொண்டு வந்த நாடகமானது தமிழினப் படுகொலைக்கு மேலதிகமாக எந்த வித வார்த்தைகளும் மொழியும் தேவையில்லை எனும் அளவுக்கு யதார்த்தமாக அமைந்திருந்தது. ஒவ்வொருவரும் தான் வகித்த கதாபாத்திரத்தின் வலிகளை மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BEHIND ME MEDIA வின் நிறுவனரும் தலைவருமான கணா செல்வா தனது ஏற்புரையில்

ஒரு ஊடகம் எதற்காக செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரிய ஒரு நிகழ்வை இரண்டாவது ஆண்டாகவும் நடாத்துகின்றது என்பது குறித்தும் மிகுந்த குரூரமாக கொலை செய்யப்பட்டு செம்மணி மனிதப்புதை குழியின் ஊடாக எலும்புகளாக தோண்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது உறவுகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் தார்மீகப் பொறுப்பு என்பது குறித்தும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.

அத்துடன் ஒரு சில அமைப்புகளைத் தவிர ஏனைய கனேடிய தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை பல்வேறு விதமாக வழிகளில் அழைத்தும் அவர்கள் வரவில்லை. 2009ஆம் ஆண்டுக்குப் பின் எம்மினத்தின் அடையாளங்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்கள் எங்கே போனார்கள்? ஆனால் ஒரு ஊடகமான நாம் நடாத்திக் கொண்டிருக்கின்ற நீதிக்கான போராட்டத்தில் பல ஊடகங்கள் இன்று எம்முடன் இணைந்து கொண்டிருக்கின்றார்கள் இது எமது செயற்பாடுகள் சரி என்பதற்கான ஆதாரம் தானே என்றார்.

எமக்குப் பின்னால் எவ்வளவு இளைஞர்கள் இருக்கின்றார்கள். நாம் யாரையும் பலவந்தமாக இங்கே அழைக்கவேயில்லை. என அவர் குறிப்பிட்டுக்கொண்டிருந்த போது நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ‘தேசியத் தலைவரின் பெயரைச் சொல்லி வாழத் தான் இன்று இங்கே வராதவர்கள் இருக்கின்றார்களே தவிர எமது மக்களுக்காக இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி போராட்ட நிகழ்வுக்கு நிதி உதவிகள், அனுசரணைகள் வழங்கியோர் சகலருக்கும் நன்றிகளைத் தெரிவித்த கணா செல்வா அவர்கள், அழித்தொழிக்கப்பட்ட எம்மினத்துக்கு நீதி கேட்கும் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளாத கனேடிய தமிழ் அரசியல்வாதிகளை நோக்கி நீங்கள் அமைப்புக்களின் பின்னால் தான் நிற்பீர்கள் என்றால் ஏன் எம்மினத்தவரிடம் வாக்குக் கேட்டுச் செல்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

‘செம்மணி மனிதப் பேரவலத்தை’ சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து பன்னாட்டு விசாரணைக்குரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டியது புலம்பெயர் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பு அதை நாம் சரிவரச் செய்ய வேண்டும் என்று கூறி நிகழ்வில் இணைந்திருந்த சகலருக்கும் நன்றிகளைத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

தாயக எழுச்சிப் பாடல்கள், நடனங்கள், ஆவணத் தொகுப்புக்கள்… பிரமுகர்களின் கருத்துக்கள், எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த திட்டங்களோடு செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா! நிகழ்வு நிறைவுபெற்றது.

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்