தமிழ் சினிமாவின் நிகரற்ற வசூல் நாயகனான சூர்யா நடிப்பில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘கருப்பு ‘ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாங்க நாலு பேரு..’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு ‘ திரைப்படத்தில் சூர்யா ,திரிஷா , இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பார் பார் பார்..’எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர்கள் அசல் கோளாறு மற்றும் அருண் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து எழுத, பின்னணி பாடகர்களான சிலம்பரசன் டி ஆர் -சாய் அபயங்கர்- அசல் கோளாறு -ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். துள்ளலான இசை பாணியில் வெளியாகி இருக்கும் இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருவதால்… வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.