“அன்னையே தெய்வம்” என்ற கொள்கை, தாயின் எல்லையற்ற அன்பு, தியாகம் மற்றும் கருணையை போற்றும் ஒரு உயர்ந்த கருத்தாகும். அன்னை என்பவர் வெறும் குழந்தையைப் பெற்றெடுத்தவர் மட்டுமல்ல, அறிவையும், நற்பண்புகளையும் புகட்டி, நம்மை ஒரு சிறந்த மனிதராக ஆக்கும் முதல் ஆசிரியர் மற்றும் கண்ணால் காணும் தெய்வம் அன்னை. அப்பேர்ப்பட்ட தாய்மையைப் போற்றும் அனைவருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.
‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. இந்த உலகில் எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், நம்மைப் படைத்து, காத்து, வளர்க்கும் அன்னையே முதன்மையானவள்.
அவளே நாம் கண்ணால் காணும் நிஜமான தெய்வ ரூபம்.தாய்மை என்னும் தெய்வீகம்:அன்பு, கருணை, இரக்கம், பொறுமை, சாந்தம் என அனைத்தின் உருவமாகவும் அன்னை திகழ்கிறாள். தான் பசி இருந்தாலும் தன் குழந்தைக்கு உணவளிக்கும் அவளது அன்பு, எந்த ஈடுஇணையற்றது. தன்னுடைய அறிவு மற்றும் மகிழ்ச்சியைத் தியாகம் செய்து, தன் குழந்தையின் எதிர்காலத்திற்காகவே அவள் வாழ்கிறாள்.
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ (தாய் மற்றும் தந்தை நாம் முதலில் அறியும் தெய்வங்கள்) என்று ஓளவையார் கூறியபடி, அன்னை நமக்கு முதல் குரு. கோயிலுக்குச் சென்று கோடி வணங்கினாலும் கிடைக்காத புண்ணியம், நம் அன்னையின் காலடியில் உள்ளது.
அன்னையின் உழைப்பும், தியாகமும் இருக்கிறது. தன்னுயிரைப் பணையம் வைத்து குழந்தையைப் பெற்று, தன் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளுக்காகவே வாழும் அன்னை, தெய்வத்திற்கு நிகரானவள்.முடிவுரை:அன்னை என்பவள், அன்பின் சிகரம். அன்னையின் அன்பிற்கு ஈடு, இணையே இல்லை. எனவே, அன்னையை உயிருள்ள தெய்வம் என மதித்து, அவரை என்றும் அன்புடனும், மரியாதையுடனும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
‘இறைவன் தனது பிம்பமாக தாயைப் படைத்தான்’. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை எடுத்துக்காட்டாக இருக்கிறார், தாயோ எல்லாமுமாக இருக்கிறார்.
“அம்மா” என்ற சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம். அம்மா என்பது வெறும் வார்த்தையல்ல, அது அன்பின் தொடர் ஊற்று.
“தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும்.
‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என நம் கலாச்சாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்து இருக்கிறது. அவ்வகையில் அன்னையே நம் முதல் கடவுளாகிறார். இந்தக் கடவுளைப்பற்றித்தான், “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என அவ்வையார் தனது நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனில் குறிப்பிட்டுள்ளார்.
அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த விலை மதிப்புள்ள உறவாகும். பெண்கள் ஒரு தாயாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக, இல்லத்தில் உள்ளவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக, வழி நடத்திச் செல்லும் ஆசானாக எத்தனையோ பாத்திரங்களில் மிளிர்ந்தாலும், அன்னைக்கு ஈடாக எதுவுமேயில்லை.
கூப்பிட்டக் குரலுக்கு தன்னால் ஓடி வர முடியாது என்ற காரணத்தால்தான், இறைவன் தனது பிம்பமாக தாயைப் படைத்தான்’ என்று சொல்வார்கள். மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்றால், தாய் எல்லாமுமாக இருக்கிறார்.
அன்பு, கருணை, பாசம், தியாகம் என அனைத்தையும், நமக்கு முழு மனதோடு தரும் அன்னையின் உழைப்பையும் அன்பையும், தியாகத்தையும் போற்றும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அன்னையர் தினம் மே மாதம் இரண்டாம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது.
தமிழகத்திற்கும் அம்மாவுக்கும் ஆரம்பம் தொட்டே பெரும் பாசப்பிணைப்பு உண்டு. தமிழ் திரைப்படங்களில்தான் மற்ற எந்த மொழியை விடவும் அம்மா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டுள்ளதாம்.
அன்னையின் பெருமைப்பற்றிக் கூறும்போது, “அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது”, “குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின் பெயர்தான் தாய்”, “தாய் எப்படி வளர்கின்றாரோ அப்படி உருவாகிறார்கள் மனிதர்கள்”, “அன்பின் உற்பத்தி தலம் அன்னை”, “தந்தையின் அன்பு கல்லறை வரை; தாயின் அன்பு உலகுள்ள வரை” என்றெல்லாம் அன்னையைப்பற்றி நிறையவேச் சொன்னாலும் அந்த அன்பின் விளக்கத்திற்கு முழுமையான நிறைவைத்தர முடியாது.
அன்னையர் தினத்தில் நமது அன்னையை மட்டுமல்ல அன்னையர்கள் அனைவரையும் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும், அவர்களுக்காக இறைவேண்டல் செய்யவேண்டும், இதயபூர்மான நமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது என்பது, ஒருநாளுக்கு மட்டும் என்று ஒதுக்கி வைக்கப்படுவதில்லை.
ஆனாலும், அன்னையர் தினம் என்பது அன்னையர்க்கு வழங்கப்படவேண்டிய உயரிய இடத்தை நினைவுறுத்தி நிற்கும் விழிப்புணர்வு நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் இது ஒரு துவக்கப்புள்ளிதான். ஆனால் அடுத்த ஆண்டு இதேநாள் வரை தொடரும் புள்ளி. சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். ‘எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். உலகில் எதற்கும் ஈடு இணையற்றவர் ஒருவர் என்றால் அவர் அன்னை தான். அனைவருக்கும் அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே.
பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை என்றால் அது மிகையல்ல. 280 நாட்கள் சுமந்து பெற்று சீராட்டி தாலாட்டி வளர்த்த அன்னையை வயோதிக வயதில் பரிதவிக்கவிடும் பாதகர்களும் மனித போர்வையில் நடமாடுகிறார்கள். முதியோர் இல்லங்களில் அகதிகளாக்கப்படும் அன்னையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.
‘அன்னையர்க்கு தினம் ஒன்று வேண்டாம்- அன்றாடம் அன்பு செய்யும் மனம் தான் வேண்டும்’ என, கவிஞர் ஒருவர் கூறியது மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறது.
அன்னையர் தினம் என்ற பெயரால் ஆண்டில் ஒரு நாளை சிறப்பித்து கொண்டாடுவதினாலோ அல்லது வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்வதினாலோ நமது வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிய அந்த ‘தாய்’ என்ற உறவுக்கு நாம் பிரதிபலன் செய்திட இயலாது. ‘தாய்’ உறவு முறை என்பது வெறும் சடங்கோ சம்பிரதாயமோ அன்று, உணர்வுப் பூர்வமாக நாம் அணுகவேண்டிய உன்னதமான உறவு முறை. தாயை மதிப்போம், தரணியில் உயர் மதிப்பீடுகளை மலரச் செய்வோம்.