எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும்அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது–வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது. இந்தத் தீவகப் பகுதி மக்கள் எதிர்பார்த்திராத பல மிகப் பெரிய அபிவிருத்திகள் இனி நடக்கும். அந்த நல்ல மாற்றங்களை இங்குள்ள மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் விசேட பங்கேற்புடன் இன்று (22.04.2026) புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்குரிய பிரதான போக்குவரத்து மார்க்கமாகவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இது எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது. குறிப்பாக, நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் இந்த இறங்குதுறையில் தமது படகுகளை நிறுத்தி வைப்பதில் பெரும் இடர்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அதற்கான நிரந்தரத் தீர்வும் தற்போது எட்டப்பட்டுள்ளது.
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தீவகப் பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது.

இப்பகுதிகளின் வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கும் அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த இறங்குதுறை புனரமைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் நெடுந்தீவு இறங்குதுறையையும் புனரமைப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
இந்த இறங்குதுறையானது 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்திலேயே புனரமைக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் இவ்வளவு பெரிய தொகையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்கள் அல்லது உதவிகள் ஊடாகவே செய்யப்பட்டன. ஆனால், தற்போது இலங்கை அரசாங்கத்தின் சொந்த நிதியில், அதாவது மக்களின் வரிப்பணத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அபிவிருத்தித் திட்டம் தீவக மக்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும். இதற்காக உழைத்த  அமைச்சர் பிமல் ரத்நாயக்க,  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த அரசாங்கத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் துரித கதியில் அபிவிருத்திகள் நடைபெறுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. எப்படியாவது தேவையற்ற கருத்துகளைக் கூறி குழப்பங்களை ஏற்படுத்தவே அவர்கள் முயற்சிக்கின்றனர். உண்மையில், அபிவிருத்தித் திட்டங்களின் தாமதத்துக்கு அரசாங்கம் காரணமல்ல. ஒரு சில அரச திணைக்களங்கள்தான் அதற்குக் காரணமாகின்றன. அவர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு, அரசாங்கத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் செயற்பட முன்வர வேண்டும், என்றார் ஆளுநர்.
இந்தக் குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7XBCOHOKSBAURBRHSKVEGPXFGQ

ஒட்டாவா வீதி சமிக்ஞைக் காவலர் மரணம்: சாரதி மீது புதிய குற்றச்சாட்டு

April 22, 2026

கடந்த மாதம் ஒட்டாவாவில் வீதி சமிக்ஞைக் காவலர் ஒருவரை வாகனத்தால் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட

FWKLIZI4LJA7JJYGT2OIRK2B5Q

ஒட்டாவாவில் வாகன விபத்து: 50 வயது பெண் பலி; மூவர் காயம்

April 22, 2026

ஒட்டாவாவின் தெற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ந்த இரண்டு வாகன மோதலில், 50 மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்

missing per fa

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பௌத்தமயமாக்கலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

April 22, 2026

வடக்கு – கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்களினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை

canada mexi shoot

மெக்சிகோ பிரமிட் தளத்தில் துப்பாக்கிச் சூடு: கனேடிய பெண் பலி – திகிலூட்டும் புகைப்படம்

April 22, 2026

மெக்சிகோவில் உள்ள புகழ்பெற்ற பிரமிட் தளத்தில், பி.சி. (B.C.) மாகாணத்தைச் சேர்ந்த பார்பரா வெல்ஷ் மற்றும் அவரது நண்பர்கள் புன்னகையுடன்

carney

அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக மேலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முடியாது – மார்க் கார்னி

April 22, 2026

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக கனடா இனிமேல் மேலதிக வர்த்தக விட்டுக்கொடுப்புகளை (Trade concessions) செய்யாது என்று பிரதமர் மார்க்

sajith

2.5 மில்லியன் டாலர் திறைசேரி நிதி ஹேக்கர் வசம்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

April 22, 2026

வெளிநாட்டுக் கடன் மறுசெலுத்தலுக்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி, தவறான அறிவுறுத்தல்கள் மூலம் ஹேக்கர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக

madapuram-ajithkumar-high-court-2026-01-23-05-09-34 (1)

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: ஆய்வாளர் ரமேஷ்குமார் மனு – சி.பி.ஐ. பதிலளிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

April 22, 2026

மதுரை, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம்,

tasmac (2_)

3 நாட்களில் ரூ.400 கோடி விற்பனை! தேர்தல் விடுமுறை எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு

HGQV6-6asAA_1wl2

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்! ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இல்லாதவர்கள்

a899a716-d286-4b64-a81f-0220906235a0

எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும்அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது–வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

April 22, 2026

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான

22fd51f3-0a87-47ef-8d51-bea6b75043c9

குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

April 22, 2026

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் இறங்குதுறையின் (Kurikadduwan Jetty) இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணிகள் இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. நிதி

ir

அணுசக்தித் திட்டத்தில் ஒரு ‘முக்கிய மைல்கல்லை’ ஈரான் எட்டியது; அமெரிக்கா அதிர்ச்சி!

April 22, 2026

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் ஒரு ‘முக்கிய மைல்கல்லை’ எட்டிவிட்டதாகவும், அது அந்நாட்டின் ஒரு மறைமுக அணு ஆயுதமாக மாறிவிட்டதாகவும்