சென்னை
தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் உயர்மட்ட ஊழலை ஒழிக்க, சிங்கப்பூர் மாடலில் மரண தண்டனைச் சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு சோகோ (Zoho) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் (X) தளத்தில் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
சிங்கப்பூர் மாடல் சட்டம்:
-
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமைச்சர், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர்மட்ட அளவிலான ஊழல்களுக்குச் சிங்கப்பூரைப் போன்று மரண தண்டனை விதிக்கும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.
ஊதிய உயர்வும் பொது மன்னிப்பும்:
-
அரசு அதிகாரிகளின் ஊதியத்தைப் பெருமளவில் உயர்த்த வேண்டும்.
-
கடந்த காலத் தவறுகளைப் பற்றித் தொடர்ந்து விவாதிப்பதைத் தவிர்த்து, முறையான சட்ட நடைமுறைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.
விரைவான சட்ட நடைமுறை:
-
உரிய சட்ட நடைமுறை என்பது வழக்குகளை 30 ஆண்டுகள் காலதாமதம் செய்வதைக் குறிக்காது. சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மிகவும் திறமையானவை; அந்த விரைவான நீதி பரிபாலன முறையை நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
லீ குவான் யூவின் அணுகுமுறை:
-
“எனது வாழ்க்கை முழுவதும் நான் சிங்கப்பூர் தந்தை லீ குவான் யூவின் தீவிர ரசிகனாக இருந்துள்ளேன்; அவருடைய ஒவ்வொரு பேச்சையும் நான் படித்துள்ளேன். அவரது சிறந்த அணுகுமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்,” என்று ஸ்ரீதர் வேம்பு முதலமைச்சர் விஜய்க்குப் பரிந்துரைத்துள்ளார்.
#SridharVembu #Zoho #ChiefMinisterVijay #TVKGovernment #AntiCorruptionTN #DeathPenalty #SingaporeModel #LeeKuanYew #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates