உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை மற்றும் பழக்க வழக்கம் மாறுப்படும். இதனால், மனிதர்கள் உடலில் மாற்றம் ஏற்படும். இதில் சிலர் உடல் பருமனாகவும் , சிலர் ஒல்லியாகவும் காணப்படுவர். ஆனால், ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் ​குறைந்த அளவில் உடல் பருமன் கொண்ட மக்கள் தொகை நாடு உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

​ உலகில் உடல் பருமன் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் வியட்நாம் முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் வயது வந்த மக்களில் சுமார் 2.1 சதவீதம் பேர் மட்டுமே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமாக சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார காரணிகள் இணைந்து செயல்படுகின்றன. வியட்நாம் மக்கள் பெரும்பாலும் உள்ளூர் உணவு வகைகளையே உட்கொள்வது வழக்கமாக கொண்டுள்ளனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதாலும், குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தப்படுவதாலும் ஆரோக்கியமாகக் கருதப்படுகின்றன. அதே நேரத்தில் நீண்ட நேர வேலை மற்றும் சில பகுதிகளில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடும் இதற்குக் காரணமாக உள்ளது என கூறப்படுகிறது.

இதேபோல், வங்காள தேசமும் உடல் பருமன் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாகும். அங்கு வயது வந்தோரில் சுமார் 3.6% பேர் மட்டுமே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆண்களை விடப் பெண்களில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது. சில பகுதிகளில் குழந்தைகள் எடை குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். கிழக்கு திமோரில் வயது வந்தோரில் சுமார் 3.8% பேர் மட்டுமே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் உணவு பற்றாக்குறை ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. மக்கள் தொகையில் சுமார் 27% பேர் உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றனர். இதுவும் உடல் பருமன் குறைவாக இருப்பதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவிலும் உடல் பருமன் விகிதம் குறைவாகவே உள்ளது. வயது வந்தோரில் சுமார் 3.9% பேர் மட்டுமே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உணவு கிடைக்காத நிலையும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இருப்பினும், நகர்ப்புற வாழ்க்கை முறை மற்றும் மாற்றம் அடையும் உணவுப் பழக்கவழக்கங்களால் இந்தியாவில் உடல் பருமன் மெதுவாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கம்போடியா, நேபாளம், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் குறைந்த உடல் பருமன் விகிதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கம்போடியாவில் சுமார் 3.9% பேர் மட்டுமே பருமனாக உள்ளனர். அந்நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து விவசாயத்தை நம்பியுள்ளதால் இயற்கை உணவுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். நேபாளத்தில் தொலைதூர பகுதிகளில் உணவு கிடைப்பதில் உள்ள சவால்களும் இதற்குக் காரணமாக இருக்கின்றன.

ஜப்பான் உலகில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு பாரம்பரிய உணவில் அதிக காய்கறிகள், மீன் போன்றவை இடம்பெறுகின்றன; இறைச்சி பயன்பாடு குறைவாக உள்ளது. அதேபோல் மக்கள் உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் கடைப்பிடிக்கின்றனர். தென் கொரியாவிலும் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சுகாதார விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.

Dau

வடக்கு ஒன்டாரியோ சுரங்கத் திட்டம்; சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கூடுதல் தரவு தேவை?

March 8, 2026

வடக்கு ஒன்டாரியோவில் உள்ள Ring of Fire சுரங்கத் திட்டம் கூட்டாட்சி அல்லது மாகாண அரசுகளால் அதிகாரப்பூர்வமாக விரைவுபடுத்தப்படவில்லை. இருப்பினும்,

ott

விமர்சனத்துக்குள்ளாகியுள்ள ஒட்டாவாவின் “நிலைத்தொழில்கள் செயல் திட்டம்”

March 8, 2026

கனடாவில் எனர்ஜி துறையில் உள்ள வேலைகளை பாதுகாக்கும் நோக்கில் பிரதமர் மார்க் கார்னி அரசு வெளியிட்ட திட்டம், வேலை இழக்கும்

iris

IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு குணமடைந்த 22 மாலுமிகள் விமானப்படை முகாமிற்கு மாற்றம்!

March 8, 2026

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை

viam

மன்னாரில் பெண்களுக்கு இடையூறு விளைவித்த இ.போ.ச. காப்பாளருக்கு தண்டனை

March 8, 2026

மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) காப்பாளருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள்

arrest

செங்கலடி பிரதான வீதி வர்த்தக நிலைய திருட்டு; ஒருவர் கைது

March 8, 2026

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி – பதுளை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற

mu

நொச்சிமுனையில் முகத்தில் யானை மிதித்ததில் குடும்பஸ்தர் பலி

March 8, 2026

மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய சோமசுந்தரம் அரிச்சந்திரன் என்பவர், சின்னப்புல்லுமலை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்த

thiga

தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தற்காலிக நிவாரணமே

March 8, 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே

ne

நியூகாசிலை வீழ்த்தி காலிறுதியில் சிற்றி

March 8, 2026

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது. விலகல் முறையிலான இத்தொடரில்,

van

செங்கலடியில் வண்டுகளுடன் உணவு: உணவகத்திற்கு சீல்

March 8, 2026

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட

va

வளைகுடா எடுத்துள்ள அதிரடி திட்டம்

March 8, 2026

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு வரவு

lax

தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

March 8, 2026

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

vi

உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

March 8, 2026

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை