சிறைச் செல்ல வேண்டிய தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள். தீவிர விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களைத் தொடர்ந்தே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.மஹிந்தவின் சகாக்கள் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல என்று கைத்தொழில் அபிவிருத்தி தெரிவித்தார்.
கொழும்பில் ) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதில் இருந்து ரணில்,சஜித் மற்றும் ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள். இதுவரை காலமும் இந்த மூன்று தரப்பினரும் தான் ஆட்சி செய்தார்கள்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தால் மஹிந்த ராஜபக்ஷவின் கால ஊழல்வாதிகளை பாதுகாப்பார், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்துக்கு ஊழல்வாதிகளை பாதுகாப்பார்.இதுவரை காலமும் இதுதான் இடம்பெற்றது. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் பரம்பரை ஆட்சி முறைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததை இவர்கள் வெறுப்புடன் பார்க்கிறார்கள். ரணில் -மஹிந்த மற்றும் சஜித் ஆகியோரை நம்பி இருந்த ஊழல்வாதிகளுக்கு செல்ல இடமில்லாத காரணத்தால் திட்டமிட்ட வகையில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
சிறைச் செல்ல வேண்டிய தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள்.கடந்த கால ஊழலுக்கு நிச்சயம் சிறைச் செல்ல நேரிடும் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். அதனால் தான் கடந்த காலங்களில் மோதிக்கொண்டவர்கள் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.
சுரேஸ் சலே கைது செய்யப்பட்டதை தற்போது பிரதான அரசியல் பிரசாரமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தீவிர விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களைத் தொடர்ந்தே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.மஹிந்தவின் சகாக்கள் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதைத் தொடர்ந்து படுகொலையாளிகள் கலக்கமடைந்துள்ளார்கள்.