உணவுகளின் விலைகள் ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் – யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வலியுறுத்தல்

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலைகள், தரம் மற்றும் அளவுகள் தொடர்பாக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைமை அவசியம் என யாழ் மாநகர சபை உறுப்பினர் றீகன் இளங்கோ வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற நிலையில், இது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றிய அவர், நகரிலுள்ள பல உணவகங்களில் உணவுகள் அளவுக்கு மீறிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளில் சேர்க்கப்படும் இறைச்சி மற்றும் கடலுணவுகளின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாகவும், விலையை உயர்த்திய உணவக உரிமையாளர்கள் உணவின் தரம் மற்றும் உள்ளடக்க அளவுகள் தொடர்பில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் மக்களிடையே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரே வகை உணவுகள் வெவ்வேறு உணவகங்களில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்த யாழ் மாநகர சபை நடவடிக்கை எடுத்து, விலை மற்றும் தரம் தொடர்பில் ஒரே சீரமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த பிரேரணை தொடர்பாக சபை உறுப்பினர்களிடையே விரிவான விவாதம் இடம்பெற்றது. உணவுகளின் விலை, தரம் மற்றும் அளவுகள் கண்காணிக்கப்படுவது அவசியம் என பலரும் வலியுறுத்தினர்.
அதேவேளை, உணவகங்கள் பயன்படுத்தும் அரிசி வகைகள் மற்றும் பிற உள்ளீட்டு பொருட்களில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக விலைகளில் மாற்றம் ஏற்படுவது இயல்பானது என்றும், உணவகங்களின் தரநிலைகளுக்கு ஏற்ப விலைகளிலும் உணவின் தரத்திலும் வேறுபாடுகள் காணப்படலாம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து, உணவகங்களின் விலை மற்றும் தர கட்டுப்பாடு தொடர்பான விடயம் நுகர்வோர் அதிகார சபை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டது
gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்