ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின் நீதி அமைச்சராக கடமை ஆற்றி வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போது நீதி அமைச்சராக பதவி வகிக்கும் ஹர்ஷண நாணயக்கார அன்று மட்டக்களப்பு சென்று சஹ்ரான் வழக்கில் முன்னிலையானதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக குறிப்பிடத்தக்களவு சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே போன்ற புலனாய்வு பிரிவு பிரதானிகளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் சஹ்ரான் போன்ற குற்றவாளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இன்று அமைச்சர் பதவி வகிப்பது நகைப்பிற்குரியது என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் ஊடாக தமிழீழ விடுதலை புலி புலம்பெயர் சமூகம் மகிழ்ச்சி அடையும் எனவும் நாட்டின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

படை வீரர் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கே இந்த அரசாங்கம் தயங்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை அரசாங்கம் உதாசீனம் செய்வதாகவும், அரசாங்கம் கலாச்சாரங்களை பேணுவதற்கு நாட்டம் காட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கம் பொருளாதாரத்தை கையாள்வதில் தோல்வி அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கள்வர்களை கைது செய்வதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் பட்டப் பகலில் கொள்ளைகளில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நிலக்கரி இறக்குமதியில், தரம் குறைந்த மருந்து பொருள் இறக்குமதியில் அரிசி கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதில் போன்ற பல்வேறு விடயங்களில் ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் மக்களை துன்புறுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கொள்கைகளை காட்டிக் கொடுக்காத நாட்டின் கலாச்சாரத்தையும் இன உரிமைகளையும் அறிந்த புதிய தலைமை ஒன்று தற்பொழுது நாட்டுக்கு அவசியமாகின்றது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்