ஈரானில் உள்ள பொதுமக்கள் இன்று ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய நேரப்படி இன்று இரவு 21:00 மணி வரை நாடு முழுவதும் ரயில்களைப் பயன்படுத்துவதையோ அல்லது ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் செல்வதையோ தவிர்க்குமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.
“ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு அருகில் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என இஸ்ரேல் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பார்சி மொழி சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெஹ்ரானில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் காலக்கெடு விதித்துள்ளார்.
ஹோமுஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகக் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்வதற்கு ஈரான் அனுமதிக்க வேண்டும்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 20:00 மணிக்குள் (அமெரிக்க நேரம்) இதற்கு ஈரான் சம்மதிக்காவிட்டால், அந்த நாட்டின் சிவில் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ளதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ரயில்கள் மீதான இந்த எச்சரிக்கை, அடுத்து வரவிருக்கும் பெரிய அளவிலான தாக்குதலுக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.