இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
முன்னதாக ஈரானிய போர்க்கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்துகின்ற நிலையில், அவ்வாறொன்று இடம்பெறவில்லை என எமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கின்றது.
ஆகையினால் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.
இதேவேளை மற்றுமொரு ஈரானிய கப்பல் இலங்கை கடல்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.