மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும், நல்லிணக்கம் மற்றும் நிவாரணத்தை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசு ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேச்சாளர் ரவீனா ஷம்தாசனி (Ravina Shamdasani) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில், இலங்கை தொடர்ந்து தொடர்ச்சியான இயற்கை பேரிடர்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளது. இது ஏழை எளிய மக்களையே அதிகம் பாதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஊழலை ஒழிப்பதற்கு அதிகாரிகளால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதும், அரசியல் படுகொலைகள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமைகள் மற்றும் 2019 தாக்குதல்கள் தொடர்பில் முக்கிய கைதுகளும் விசாரணைகளும் இடம்பெற்றிருப்பதும் ஊக்கமளிப்பதாக இருப்பினும், நீண்டகாலமாக நிலவும் தண்டனையிலிருந்து விலக்கு பெறும் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர மேலும் பல செய்யப்பட வேண்டியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது, இதனால் தன்னிச்சையான கைதுகளும், குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகால தடுப்புக்காவல்களும் இடம்பெறுகின்றன. சித்திரவதைகள், காவலில் நிகழும் மரணங்கள், சிறைச்சாலை நெருக்கடி மற்றும் வன்முறைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. சிவில் சமூகப் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதோடு, காணி மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்களும் தொடர்ந்து நிலவி வருகின்றன.
இலங்கை தனது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரை அதைப் பயன்படுத்துவதைத் இடைநிறுத்துமாறும் (moratorium), அச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் கைதிகளை விடுதலை செய்யுமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என ரவீனா ஷம்தாசனி தெரிவித்துள்ளார்