அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் மற்றும் 47 வயதான சமிந்திகா ஜெயவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு அந்த வீட்டிலிருந்து 30 விநாடி இடைவெளியில் இரண்டு துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இது ஒரு கொலை மற்றும் உயிர் மாய்ப்பு சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த சமிந்திகா இலங்கை பூர்வீகம் கொண்டவராகும். சமிந்திகா சமீபத்தில் தனது கணவரை விட்டுப் பிரிந்து சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆரோன் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆரோன் ஏற்கனவே பலமுறை வன்முறை மற்றும் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டவர் என முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட அயலவர்கள் அது நரியைச் சுடப் பயன்படுத்தப்பட்ட சத்தமாக இருக்கலாம் என தவறாக கருதியுள்ளனர்.

இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை எனவும் தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஆரோனின் குடும்பத்தினர் இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதோடு, தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுள்ளனர்.

ஒரு வருடத்திற்கு மேலாக அந்த வீட்டில் வசித்து வந்த இவர்களை ஒரு அன்பான தம்பதி என அயலவர்கள் நினைத்திருந்தனர். எனினும் சமிந்திகா சிறிது காலம் பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் கூடுதல் தகவல் தெரிந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் நடந்த வீடு Haunted Hills எனப்படும் மர்மமான கதைகள் நிறைந்த பகுதிக்கு அருகே அமைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

du

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கருகில் வெடிப்பு

March 7, 2026

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே இன்று (7) காலை வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும்

gu

ஜா-எலவில் துப்பாக்கிச் சூடு!

March 7, 2026

ன்று (07) அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும்

is

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

March 7, 2026

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு

1688202098-EARTHQUAKE-6

ஈரானில் நிலநடுக்கம்

March 7, 2026

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான

war

கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

March 7, 2026

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில்

mur

முதியவர் அடித்துக் கொலை: ஒருவர் கைது!

March 7, 2026

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்

wate

கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீட்பு!

March 7, 2026

ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்று, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ko

கோடாவுடன் இருவர் கைது!

March 7, 2026

கட்டுநாயக்க – தடுகங்ஓயா பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை

arrest

அக்குரேகொட இரட்டைக் கொலைக்கு உதவிய மேலும் இருவர் கைது!

March 7, 2026

தலங்கமை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு

acc

பிரதான வீதியில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு

March 7, 2026

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்

t

நிபந்தனையற்ற சரணாகதி தவிர ஈரானுக்கு வழியில்லை – ட்ரம்ப் எச்சரிக்கை

March 7, 2026

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனனாதிபதி டொனால்ட்

ir

இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

March 7, 2026

ஐக்கிய அமெரிக்காவானது தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும்