அரசு நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் பயணிக்கும்

எதிர்க்கட்சியினர் எத்தகைய துரோக செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் தொடர்ந்து பயணிக்கும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மத்திய கிழக்கு யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்களை குழப்பும் நோக்கிலேயே எதிர்க்கட்சியினர் இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது. அனைத்து நிலைமைகளையும் அரசாங்கம் மிக கவனமாக கையாண்டு வருகிறது.

கடலுக்குச் செல்லும் அனைத்து மீனவர்களுக்கும் போதுமானளவு எரிபொருளை வழங்குவதற்கு நாம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோன்று நாட்டில் அனைத்து விவசாயிகளுக்கும் தமது விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான போதியளவு எரிபொருள் வழங்கப்படுகிறது.அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட வரிசை யுகம் திடீரென ஏற்பட்டது அல்ல.தற்போதைய எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட மோசமான நடவடிக்கைகளே அதற்குக் காரணம். எதிர்க்கட்சியினர் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது தமது பைகளை நிரப்புவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். சுனாமியின் போது கூட கொள்ளையடித்தவர்கள் அவர்கள்.அதில் குபேரர்களாக மாறியவர்களும் உண்டு.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி எமது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதல்ல. இது மத்திய கிழக்கு அல்லது சர்வதேச நாடுகளின் யுத்தத்தினால் ஏற்பட்ட நெருக்கடியாகும். இதன் காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் தற்போது எரிபொருள் பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

முன்னேற்றமடைந்துள்ள ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டாலும் அந்த நாடுகளும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

வங்குரோத்து அடைந்த நாடு என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம்.

தற்போது நாடு தேசிய உற்பத்தியில் ஐந்து விதமான அதிகரிப்பைக் கொண்டுள்ளது. 3.3 வீத சேவைத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது

300 மில்லியன் டொலர் வருமானத்தை கடற்றொழில் துறை பெற்றுக் கொண்டுள்ளது என்றார்.

gun

யால சரணாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

March 21, 2026

யால தேசிய வனப்பகுதியின் கிரிந்த, பெப்புவ (Bebuwa) வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில் இன்று சனிக்கிழமை (21) காலை துப்பாக்கிச்

kap

அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல்?

March 21, 2026

மத்திய கிழக்கு யுத்தத்தின்போது அரசாங்கம் மத்திய நிலையில் இருந்தாலும் உறுதியான வெளிநாட்டுக்கொள்கையில் இருக்கவேண்டும். என்றாலும் இந்த யுத்தத்தில் அரசாங்கம் நடுநிலையாக

chandrasekar

அரசு நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் பயணிக்கும்

March 21, 2026

எதிர்க்கட்சியினர் எத்தகைய துரோக செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் தொடர்ந்து பயணிக்கும் என

jail

பாதாள உலகக் குழுவினரின் சகாக்கள் 15 பேர் கைது

March 21, 2026

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளின் ஆலோசனையின் பேரில் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த

vadd

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

March 21, 2026

ழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இன்றைய தினம் (21) அமைதியான முறையில்

56

நாட்டின் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு

March 21, 2026

நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு இன்று சனிக்கிழமை

drug

சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி?

March 21, 2026

காலி – கந்தேவத்தை பகுதியில், போதைப்பொருள் உள்ளிட்ட சில பொருட்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (20) சந்தேக நபர் ஒருவர்

imf

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியம் கரிசனை

March 21, 2026

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய

ce

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

March 21, 2026

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

death

முச்சக்கரவண்டி சாரதி தற்கொலை!

March 21, 2026

மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில்

kemunu

நாட்டில் தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம்

March 21, 2026

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு

gff

வாத்துவையில் ரயில் – கார் மோதி விபத்து

March 21, 2026

வாத்துவ பகுதியில் உள்ள ரயில் கடவுப்பாதை ஒன்றில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர். மருதானையில்