அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம்

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும்போது வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, 2027 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய கட்டமைக்கப்பட்ட புள்ளிகள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்காக, அரச காணியில் 8 வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் தரப்பினர், அதேபோல் 01 முதல் 06 வருடங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தர வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் மின்சாரம், நீர் அல்லது வரி ஆவணங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 4 புள்ளிகள் வரை கிடைக்கும் வகையில் புதிய முறைமை தயாரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமர்வின்போது பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் எதிர்கொள்ளும் மன ரீதியான, சுகாதார மற்றும் சமூகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, டிஜிட்டல் வெளியில் அவர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கையொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் கல்வி,சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுக்கள், இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. இதன் முன்னேற்றமாக, சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய வழிகாட்டல் கோவை ஒன்றைத் தயாரிப்பதற்கும், மூளை ஆரோக்கியம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் தேசிய மட்டத்திலான கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இணையவழியூடான வன்முறைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக, மாகாண மற்றும் சிறுவர் நன்னடத்தை சேவைகள் திணைக்களம் ‘வேர்ல்ட் விஷன்’ நிறுவனத்துடன் இணைந்து திட்டமொன்றைத் தயாரித்துள்ளதுடன், அதற்காக சார்க் அபிவிருத்தி நிதியத்தின் நிதி அனுசரணையப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று, யுனிசெஃப் அமைப்பின் ஒத்துழைப்புடன் ஆசிரியர்களுக்கான டிஜிட்டல் திறன் கட்டமைப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள இணையவழிப் பாதுகாப்பு தொகுதி மூலம் சுமார் 750 பயிற்றுவிப்பாளர்கள் ஏற்கனவே பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 106 தொலைதூரக் கற்றல் நிலையங்கள் ஊடாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்நிலை பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டல் கோவையை 2026 செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்குத் தயாராக உள்ளது. பிள்ளைகள் கைபேசிகளுக்கு அடிமையாவதில் இருந்து அவர்களை மீட்பதற்கான குடும்ப வலுவூட்டல் முன்னோடித் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் துமிந்த குருகே தார்மீக ரீதியாக தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கி வருகின்றார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்குள், சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக அமைச்சரவைத் தீர்மானங்களுக்கு அமைவாக பல நிறுவனங்களின் பங்களிப்புடன் பன்முகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளது. இப்பொறிமுறையின் கீழ், வாழ்வுக்குக் கைகொடுக்கும் திட்டத்தின் மூலம் அநாதரவான சிறுவர்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு தலா 2 மில்லியன் ரூபா வீதம் வழங்கப்படுவதுடன், ‘அர்த்த’ திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த அநாதைச் சிறுவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.

மேலும், பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத சிறுவர்களுக்கு அவற்றை வழங்குதல்இ பாடசாலை நேரத்தின் பின்னர் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகும் சிறுவர்களுக்காக ரத்மலானை பிரதேசத்தை மையமாகக் கொண்டு ‘செனெஹச’ என்ற பெயரில் முன்னோடித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல், உடல் ரீதியான தண்டனைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் 2025-2029 தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், சிறுவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் சாட்சியமளிக்கக் கூடிய வகையில், வீடியோ சாட்சியங்களை பதிவு செய்யும் இரண்டு நிலையங்கள் கராப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் போது வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, 2027 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய கட்டமைக்கப்பட்ட புள்ளிகள் அடங்கிய சுற்றறிக்கொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்காக, அரசாங்க காணியில் 08 வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் தரப்பினர், அதேபோல் 01 முதல் 06 வருடங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தர வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் மின்சாரம், நீர் அல்லது வரி ஆவணங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 04 புள்ளிகள் வரை கிடைக்கும் வகையில் புதிய முறைமை தயாரிக்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் காத்திருப்புப் பட்டியலுக்கு புறம்பாக மாணவர்கள் சேர்க்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் என்ற வரம்பிற்குள் தற்காலிக காத்திருப்புப் பட்டியல்களைத் தயாரிக்குமாறு புதிய சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. விசேட சந்தர்ப்பங்களில், தேசிய அல்லது மாகாண கல்விப் பணிப்பாளர்களின் பூர்வாங்க அனுமதியின் பேரில் மட்டுமே அதனை 100 சதவீதம் வரை திருத்த முடியும். மேலும், கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் வகுப்பறையொன்றில் இருக்க வேண்டிய அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் அதற்குரிய கொள்கை ரீதியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை