அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராகும் ஈரான்

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

கார்க் தீவிலுள்ள ஒவ்வொரு இராணுவ இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

சுமார் 5 மைல் நீளம் கொண்ட இந்த சிறிய தீவு, ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.

கார்க் தீவு அந்நாட்டின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாகக் கருதப்படுவதுடன், இது ஈரானின் ‘பெட்ரோலிய உயிர்நாடி’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை இந்தத் தீவின் மூலமே முன்னெடுக்கின்றது.

அத்துடன், ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கொள்வனவாளரான சீனா, இந்தத் தீவிலிருந்தே எண்ணெயைப் பெற்றுக்கொள்கிறது.

எனவே, கார்க் தீவு மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ஈரானிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்க் தீவு மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கப் படைகள் கார்க் தீவின் இராணுவ இலக்குகளைத் தாக்கினாலும், எண்ணெய் ஏற்றுமதி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் எரிபொருள் கப்பல்கள் மீது ஈரானோ அல்லது வேறு தரப்பினரோ தாக்குதல் நடத்தினால், இந்தத் தீர்மானம் குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் பிராந்தியத்திலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவின் இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானிய ஆயுதப் படைகளின் கூட்டு நடவடிக்கை கட்டளைப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

hea

இலங்கையின் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு சுகாதார அமைச்சர் விஜயம்!

March 16, 2026

கண்டி, பல்லேகலே முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள இலங்கையின் பெரிய அளவிலான இரண்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களான ‘கெலும் லைஃப்

AAAA

ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அச்சுறுத்தல் – ஐ.நா தூதர்

March 16, 2026

ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வலுவான நிலையில் உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப்பின் ஐ.நா தூதரான

anu

வலுசக்தி விநியோகக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

March 16, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர

h

பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் பாடசாலை விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர்

March 16, 2026

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர்

gov

எரிபொருள் நெருக்கடி; நான்கு நாள் வேலை வாரம்?

March 16, 2026

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை

45666

கொக்குதொடுவாய் – குஞ்சுக்கால்வெளியில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்த நடவடிக்கை!

March 15, 2026

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில், கொக்குதொடுவாய் குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி

leba

லெபனானில் இதுவரை 850 பேர் வரை பலி

March 15, 2026

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இதுவரையில் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்

56699

சாரதிகள் கடும் அவதி

March 15, 2026

QR நடைமுறையின் கீழ் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்

acc

அமைச்சரின் சகோதரர் விபத்தில் பலி

March 15, 2026

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு

popp

அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது குறித்து போப் ஆழ்ந்த கவலை

March 15, 2026

த்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து

4555

இனிவரும் காலங்களில் எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி!

March 15, 2026

இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும்

hea

அதிக வெப்பத்துடனான காலநிலை; 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

March 15, 2026

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ,