அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும்?

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது. இதனால் அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் எப்படியாவது ஈரானிடம் பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று முயன்று வருகிறார். இதனிடையே ஈரானின் புதிய அதியுயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஒப்புக்கொண்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ‘அல் அரேபியா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இது ஒரு முக்கியமான ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அதில் சில “முக்கிய உடன்பாடுகள்” எட்டப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும், விரைவில் ஒரு தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் நம்பிக்கையுடன் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் டிரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகனும் நெருங்கிய உதவியாளருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரான் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஈரான் தரப்பு மறுப்பு

எனினும், ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம், அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்புகள் எதுவும் இல்லை என்று ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இது தூதரக ரீதியான தொடர்புகள் குறித்த முரண்பட்ட தகவல்களாக பார்க்கப்படுகிறது

ஐந்து நாள் அவகாசம்

“ஈரானுடன் நாங்கள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இந்த முறை அவர்கள் மிகவும் தீவிரமாக உள்ளனர்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்காக ஐந்து நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவில் அனைவருக்கும் சாதகமான ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைக்கக்கூடும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

தாக்குதல்கள் ஒத்திவைப்பு

பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர விரும்பிய டிரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாக முன்பு விடுத்த எச்சரிக்கையிலிருந்து பின்வாங்கியுள்ளார்.

ஏனெனில், அமெரிக்கா ஈரானின் மின் கட்டமைப்பைத் தாக்கினால் பதிலுக்கு இஸ்ரேலிய மின் நிலையங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள், கடல் நீரை குடிநீராக்கும் வளைகுநாடா நாடுகளின் மையங்கள் ஆகியவற்றை மொத்தமாக தகர்ப்போம் என்று ஈரான் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஈரான் அப்படி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை காலி செய்தால் பெரிய சிக்கல் ஏற்படும். அதேபோல் மின் கட்டமைப்பு குலைந்தாலும் வளைகுடா நாடுகள் மீண்டு வருவது கடினம்.

ஹார்முஸ் ஜலசந்தி

எல்லா சிக்கலுக்கும் ஹார்முஸ் ஜலசந்தி காரணமாக உள்ளது. ஈரானின் தாக்குதல்களால் தற்போது மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி, பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால் “மிக விரைவில் திறக்கப்படும்” என்று டிரம்ப் கூறியிருக்கிறார். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது.

இப்போது போர் காரணமாக அமெரிக்க நட்பு நாடுகளின் கப்பல்களை ஈரான் அனுமதிக்கவில்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

pro

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

March 24, 2026

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

vet

மேஜர் ஜெனரல் சில்வா மற்றும் ஆளுநர் வேதநாயகன் விசேட சந்திப்பு

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந.

arj

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!

March 24, 2026

கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு

Gold

ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்த தங்க விலை

March 24, 2026

நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

xa

அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

March 24, 2026

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு

his

ஹெஸ்புல்லாவுடன் தொடர்பு: வான்கூவர் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

March 24, 2026

ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதி வழங்கும் 100 மில்லியன் டொலர் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி வான்கூவரைச் சேர்ந்த

nalinda-jayatissa_2025.01

எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

March 24, 2026

தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த

ceb

மீண்டும் மின்வெட்டு

March 24, 2026

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு

rea

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

March 24, 2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.