ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி, 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் திகதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது.
சுத்தமான குடிநீர் என்பது ஒரு அடிப்படை மனித உரிமையாகும், மேலும் தற்போது உலகம் முழுவதும் 2.2 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை .
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேசிய எல்லைகளைக் கடக்கும் நீர்வழிகள் மூலம் தங்கள் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.
153 நாடுகள் ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர் ஆதாரங்களை அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுகின்றன. உலக வங்கியின் கணிப்புகளின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் உலகம் தேவைக்கும் கிடைக்கும் நீர் இருப்புக்கும் இடையிலான இடைவெளியை எதிர்கொள்ளும்.
நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.
இதுமட்டுமின்றி அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும்.
உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். தண்ணீர் குடிக்காமல் உங்களால் எத்தனை நாட்கள் அதிகப்பட்சமாக வாழ்ந்திட வாழ முடியும்?. ஒரு வாரம் கூட என வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மேல் நம்மால் வாழ முடியாது. எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.