அடிப்படை மனித உரிமை சுத்தமான குடிநீர்; இன்று உலக தண்ணீர் தினம்!

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி, 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் திகதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.

நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது.

சுத்தமான குடிநீர் என்பது ஒரு அடிப்படை மனித உரிமையாகும், மேலும் தற்போது உலகம் முழுவதும் 2.2 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை .

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேசிய எல்லைகளைக் கடக்கும் நீர்வழிகள் மூலம் தங்கள் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.

153 நாடுகள் ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர் ஆதாரங்களை அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுகின்றன. உலக வங்கியின் கணிப்புகளின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் உலகம் தேவைக்கும் கிடைக்கும் நீர் இருப்புக்கும் இடையிலான இடைவெளியை எதிர்கொள்ளும்.

நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.

இதுமட்டுமின்றி அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.

தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும்.

உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். தண்ணீர் குடிக்காமல் உங்களால் எத்தனை நாட்கள் அதிகப்பட்சமாக வாழ்ந்திட வாழ முடியும்?. ஒரு வாரம் கூட என வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மேல் நம்மால் வாழ முடியாது. எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.

 

Mani

‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்திள் ‘தங்கரத்தினமே..’ வெளியீடு!

March 22, 2026

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரமாக திரையில் தோன்றும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற

kal

பரத் – அஜய் கார்த்தி இணைந்து நடிக்கும் ‘காளிதாஸ் 2’படத்தின் முன்னோட்டம் வெளியீடு

March 22, 2026

சந்தை மதிப்புள்ள நடிகர் பரத் மற்றும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி ஆகியோர் இணைந்து முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘காளிதாஸ்

muth

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவாவின் முதல் முதலாய்’ பாடல்

March 22, 2026

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ எனும் பெயரில் வெளியான சுயாதீன இசை அல்ப பாடலில்

Nalinda

இலங்கைக்கு மார்ச் 25 இல் 37இ000 மெற்றிக் தொன் டீசல் கப்பல் வருகிறது!

March 22, 2026

சுமார் 37,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக சுகாதார

sanj

இலங்கையில் சட்டம் என்பது விசாரணை அதிகாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது!

March 22, 2026

இலங்கையில் சட்டம் என்பது தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள்

Epst

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாண எப்ஸ்டீன் மாளிகையில் விசாரணை

March 22, 2026

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஜெப்ரி எப்ஸ்டீனின் மாளிகையில் நடைபெற்று வரும் விரிவான தேடுதல் வேட்டை, சர்வதேச அளவில்

iraa

ஒரே நாளில் ஈரானின் 17 மாகாணங்கள் மீது 640 தாக்குதல்கள்

March 22, 2026

ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித

1688202098-EARTHQUAKE-6

இந்தியாவில் நில நடுக்கம்

March 22, 2026

இந்தியாவின் சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று(21.03.2026) இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8.46 மணியளவில் மெக்னிடியூட்

jeya

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

March 22, 2026

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு விடவும், வாக்கெடுப்பு நடத்தவும் சபாநாயகர் தீர்மானித்துள்ளார். நாட்டில் தற்போது

arrest

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் இயந்திரங்களை இறக்குமதி செய்த வர்த்தகர் கைது

March 22, 2026

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் இயந்திரங்களை இறக்குமதி செய்து, அவற்றை இலங்கையில் ஒன்றிணைத்து விற்பனை செய்து வந்த

jap

உயர்மட்ட பாதுகாப்பு பேச்சு

March 22, 2026

இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோருக்கிடையிலான

flight

தொடரும் போர் பதற்றங்கள்; விமானக் கட்டணங்கள் இருமடங்காக உயரும்!

March 22, 2026

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் ஜெட் எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், விமான கட்டணங்கள்