இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று காலை 9 மணியளவில் இந்திய தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார்.
அதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார்.
இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.