“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்‌ரேல் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் மொஜ்தபா, ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இஸ்‌ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்‌ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும், உலகத்தையும், பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. […]

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம் அவர்களை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்கத்தினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (27) ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்றொழில் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மறுநாள் அவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், கடலுக்குள் சென்று தேடுதல் […]

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்கால நிலைமைகளை முன்கூட்டியே கணிப்பது கடினம் என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சவால்களை ஒன்றிணைந்து வெற்றிகொள்ள வேண்டுமென ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு: […]

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை தாக்குதலால் முற்றாக அழிவடைந்துள்ளதாக, மட்டக்களப்பு திறந்த வெளிச் சிறைச்சாலை பொறுப்பதிகாரி திலிப் பிரான்சிஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு பின்னால் உள்ள திருப்பெருந்துறை திறந்தவெளி சிறைச்சாலை காணியில் இந்த நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், நள்ளிரவு வேளையில் வயல் நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த பயிர்களை மிதித்தும் உண்டும் அழித்துள்ளது. குறித்த […]

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில் காயமடைந்துள்ளனர். திருச்சியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் விக்னேஷ் (20) மற்றும் அவரது நண்பர் அருண் (21) ஆகியோர், தஞ்சாவூர் அருகே சென்றபோது அவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விக்னேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் […]

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய எல்.ஆர். கிம்ஹானி பெரேரா என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் குழுத் தலைவியாக (Team Leader) பணியாற்றி வந்துள்ளார். இந்த கொலையை செய்ததாக சந்தேகப்படும் , அதே தொழிற்சாலையில் உதவியாளராக பணியாற்றிய திருமணமான ஊழியர், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளார். பதுளை, […]

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட நிபுணர் வைத்தியர் எஸ்.டி.யு.எம். ரங்க இது குறித்து தெரிவிக்கையில், “இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 7 பேர் நடுத்தர அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஏனையோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் காயமடைந்தவர்கள் தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் […]

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் தோற்றது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றதோடு, வொல்வ்ஸ் சார்பாக றொட்றிகோ கோமெஸ், அன்ட்ரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 59 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி உள்ளது. மன்செஸ்டர் யுனைட்டெட், அஸ்தன் வில்லா ஆகியன தலா […]

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச் செய்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இடைக்கால நிர்வாகத்தை சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதிக்காத்தென்ற நிலையில அவர்களுடன் கதைத்து தேவையான மாற்றங்களைச் செய்ய இரண்டாண்டுகளைப் பெற்றதாகவும் ஆனால் தயாசிறி ஜயசேகர விளையாட்டமைச்சராக வந்து அனைத்தையும் மாற்றியதாகவும் நவீன் சமூகவலைத்தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். அந்நேரத்தில் அரசியல் சூழல் காரணமாக நிஷாந்தவுக்கு ஆதரவளிக்கவில்லை நவீன் மேலும் […]

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. காலி வீதியில், கருச சந்தியிலிருந்து மொரட்டுவை நோக்கி அமைந்துள்ள வீரபுரன் அப்பு வித்தியாலயத்திற்கு முன்னால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்திற்கு அடியில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மொரட்டுமுல்லை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். […]