22திருத்தம் – உயர்நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்டுள்ள 22 வது திருத்தத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அமர்வு (Bench) அமைக்கப்பட்ட விதம், நடைமுறை நியாயத்தன்மை (Procedural fairness) மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து, காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கத்தின் (CLA) தலைவர் ஸ்டீவன் திரு (Steven Thiru) தனது ஒன்பது பக்க அறிக்கையில் பல கவலைகளை எழுப்பியுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த திரு, செப்டம்பர் 2 ஆம் […]
அமெரிக்காவிற்கு எதிரான எதிர்-வரி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் நீண்டகால வர்த்தகப் போருக்கு கனடா தயார்

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக கனடாவால் விதிக்கப்பட்ட பழிவாங்கும் வர்த்தக வரிகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன; இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான எந்த அறிகுறிகளும் தற்போதைக்குத் தெரியவில்லை. இந்த எதிர்-வரிகள் எஃகு (Steel), தளபாடங்கள் முதல் பருத்தி டி-ஷர்ட்டுகள் வரை சுமார் 28 பில்லியன் கனடிய டாலர் ($20 பில்லியன்) மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்குப் பொருந்தும், மேலும் இவை 50% வரை உயர்த்தப்படும். ஆரம்பத்தில் புதிய மீன்கள் மற்றும் நண்டுகள் (Lobster) ஆகியவை […]
1,340 பேரை பலிகொண்ட பேரழிவு: 13 ஆம் நாள் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு!

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 1,340-க்கும் மேற்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டு அரசாங்கம் நேற்று (07) திங்கட்கிழமை தேசிய துக்க தினமாக அறிவித்து அனுஷ்டித்துள்ளது. இமயமலையில் ஏற்பட்ட பனிப் பாறை சரிவைத் தொடர்ந்து பொங்கி வழிந்த போட்டேகோஷி மற்றும் திரிசூலி நதிகளின் வெள்ளப்பெருக்கில் சிக்கி 589 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 5,000 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர். […]
மனிதநேய உணர்வை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒருவரே பண்பாடான மனிதர் – பிரதமர் ஹரிணி

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது ஒரு சிறு பிள்ளை, நிர்க்கதியான ஒருவர் அல்லது பெண் ஒருவரை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் சில கருத்துக்களைப் பார்க்கும்போது, பண்பாடான மனிதனின் தேவையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பண்பாடான மனிதர் என்பவர் புத்தகங்கள் மற்றும் நூல்களிலிருந்து அறிவை மட்டுமே பெற்றவரோ அல்லது மனப்பாடம் செய்தவற்றை முன்வைப்பவரோ அல்ல என்றும், இலக்கியப் படைப்புகளின் ஊடாகத் தனது உள்ளார்ந்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, மனிதநேய உணர்வை […]
பலத்த மழைக்கு வாய்ப்பு!

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய […]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று (07) பிற்பகல் ஆரம்பமானது. இந்த அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரையுடன் இந்த அமர்வு ஆரம்பமானது. இதன்போது இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கும் பணியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மேற்கொள்ளவுள்ளார். இதன்மூலம் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் […]
செம்மணியை நினைவுகூர்ந்து லண்டனில் 583 வெள்ளை விரிப்புகளுடன் அமைதிப் போராட்டம்!

கிருஷாந்தி குமாரசுவாமியின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 583 மனித எச்சங்களை நினைவுகூரும் வகையில், லண்டனில் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டன் பிரிம்ரோஸ் ஹில் பூங்காவில் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், 583 வெள்ளைத் துணிகள் பயன்படுத்தப்பட்டு, அவற்றால் உடல்களை முழுமையாக மூடியவாறு பங்கேற்பாளர்கள் தரையில் படுத்திருந்தனர். 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசுவாமி, செம்மணிச் சந்தியில் அமைந்திருந்த இராணுவ சோதனைச் சாவடியில் தடுத்து […]
டொராண்டோவில் தன்னை கருணைக்கொலை செய்யக் கோரிய நடிகை

னநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் […]
செம்மணியில் கிருஷாந்தி உள்ளிட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி குமாரசாமி கிருஷாந்தி உள்ளிட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை மாலை செம்மணியில் நடைபெற்றது. இதன்போது, கிருஷாந்தியுடன் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவுகூரப்பட்டு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996 செப்டம்பர் 7ஆம் திகதி, 18 வயதான கிருஷாந்தி செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அவரைத் தேடி சென்ற அவரது […]
பேஸ்புக் விருந்து; 41 பேர் கைது
தெல்தெனிய விக்டோரியாப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துப் பார்ட்டியின் மீது பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது, 36 ஆண்களும் 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சோதனையின் போது சந்தேக நபர்களிடம் இருந்த பல்வேறு வகையான போதைப்பொருட்களையும் மதுபானங்களையும் பொலிஸார் கைப்பற்றினர். இவற்றுள் 947 மில்லிகிராம் கஞ்சா, 3.657 கிராம் ஹஷிஸ், 1.276 கிராம் ஐஸ் (படிக […]