இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது, நாட்டில் சட்ட ஆட்சியை வலுப்படுத்துதல், நீதி முன்னேற்றம் மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவான கருத்துப்பகிர்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள கல்வி மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் நாட்டின் நீண்டகால தேசிய முன்னேற்றத் திட்டங்கள் தொடர்பாகவும் இரு […]

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சட்டத்தரணியும், கண்டியில் மதிப்புமிக்க சட்ட நிபுணராகவும் அறியப்பட்ட சங்கக்கார, தனது தொழில்முறை பணிகளால் சமூகத்தில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார். அன்னாரது உடல் கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு 2026 நாளை மார்ச் 4 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு கண்டிமஹியாவ சேமக்காலையில் நடைபெறவுள்ளது. அன்னாரின் உடல் மாலை 4.30 […]

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும் குறிப்பாக சமூக மட்டத்தில் சிறு சேமிப்பு மற்றும் கடன் சேவை வழங்கும் பெண்களை குறித்த சட்டத்துக்குள் கொண்டு வருவதால் தமக்கு ஏற்படவுள்ள பாதிப்பு களை கருத்தில் கொண்டு அதற்கு எதிராக மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (03) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் […]

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார். அத்துடன், புகலிடம் கோருவோருக்கு ‘தற்காலிகப் பாதுகாப்பு’ (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதிய விதிகளின்படி, அகதி அந்தஸ்து பெற்றவர்களின் வழக்குகள் ஒவ்வொரு 30 மாதங்களுக்கு ஒருமுறை (இரண்டரை ஆண்டுகள்) மறுபரிசீலனை செய்யப்படும். அந்த காலக்கட்டத்தில் அவர்களின் தாய்நாடு பாதுகாப்பானதாகக் […]

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். “ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. உண்மையில், இந்தப் போரை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரதானமான மற்றும் ஒரே காரணமும் அதுவேயாகும்,” என லாவ்ரோவ் மேலும் குறிப்பிட்டார். ஈரான் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களின் விளைவுகள் தற்போது பிராந்தியம் முழுவதும் உணரப்படுவதாகவும், குறிப்பாக அரபு நாடுகள் […]

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக ஆரம்பத்தில் 352 அதிபர் பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 577 ஆக உயர்ந்துள்ளது. எனினும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு குறித்த பதவிகள் தொடர்பாக எவரும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாக நீண்ட […]

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம் செய்தார். மன்னாருக்குச் சென்ற பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு விஜயம் செய்தார். இதன்போது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, மன்னார் மாவட்ட நீதவான் ஐ.என்.றிஸ்வான், மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் எம்.எம்.எப்.ஸிஹாரா மற்றும் சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்து பிரதம நீதியரசரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மன்னார் மேல் […]

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை நடைபெற்ற MILAN – 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல்சள் கண்காணிப்பில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்திர ஆகிய கப்பல்கள், பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், பெப்ரவரி 27ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த இரண்டு கப்பல்களையும் கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் […]

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும், நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 504 இடங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதுடன், மொத்த தாக்குதல்கள் 1,039 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் அவசர மருத்துவ சேவைகளை வழங்குதல் போன்ற பணிகளில் தொடர்ந்து […]

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தாக்கல் செய்த ரிட் மனுவை, விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக மார்ச் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவானது மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான் அபயசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் […]