கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய திருமணங்களை ரத்து செய்யாமல் (Divorce), அடுத்தடுத்து நான்கு பெண்களைத் திருமணம் செய்துகொண்ட வினோதமான வழக்கு குறித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநில பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஜேசன் வாஷிங்டன் கடந்த பத்து ஆண்டுகளில் பல பெண்களைத் திருமணம் செய்துள்ளார். அவரிடம் ஏற்கனவே கொலைக் குற்றம் (Manslaughter) மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான குற்றப் பின்னணி […]
இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி மற்றும் சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிறுவனங்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva), இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்கான உடன்பாட்டை எட்டியமைக்காக இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்தார். அத்துடன், நிலையான […]
மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் – லிட்ரோ

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மேலும், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. மேலும் 17500 மெட்ரிக் தொன் எரிவாயு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் ஒன்று தென்னாபிரிக்கா வழியாக மாலைத்தீவை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மே […]
தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதம பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆகியோரின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சந்தேகநபரை ஏப்ரல் மாதம் 28ஆம் […]
கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தங்களுக்கு தெரிந்த வகையில் இந்த விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணைகள் தொடர்பில் சிலர் பதற்றமடைந்துள்ளதும் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பில் பீதி அடைந்துள்ளதனை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளின் மூலம் வெளிப்படும் சில தகவல்களின் அடிப்படையில் சிலர் […]
கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான 14 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் கடந்த 9ஆம் திகதி 10 இந்திய கடற்தொழிலாளர்களும், கடந்த 14ஆம் திகதி நான்கு இந்திய கடற்தொழிலாளர்களும் இரணைதீவு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் […]
இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் தான் இலங்கைக்கு ஒரு எதிர்காலம் வாய்ப்பாக வசதியாக அமையும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோலுக்கிணங்க புதிதாக நிர்மானிக்கப்பட்ட கண்ணனி விளையாட்டு மைதானத்தின் ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு இன்று (17) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது […]
ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் […]
இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியத் துணை குடியரசுத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்புப் பயணம் இதுவாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேசுவார். பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார். இலங்கையின் பிற உயர்மட்டத் தலைவர்களையும், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் சந்திப்பார். […]
நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நாளை வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது QR முறைமையைக் கருத்தில் கொள்ளாதிருக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது. எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் […]