மயில் தோகை விரிக்கும் இந்திய விமானப்படையின் ‘சாரங்’ சாகசக் குழு!

சாரங் (Sarang) என்பது இந்திய விமானப்படையின் (IAF) புகழ்பெற்ற வான்வழி சாகச ஹெலிகாப்டர் காட்சிக் குழுவாகும். உலகிலேயே ஐந்து ஹெலிகாப்டர்களைக் கொண்டு ஒருங்கிணைந்த சாகசங்களை (Aerobatics) நிகழ்த்தும் ஒரே வான்படை குழு இதுவாகும். இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான HAL துருவ் (Advanced Light Helicopter – ALH Dhruv) ஹெலிகாப்டர்களைக் கொண்டு இவர்கள் சாகசங்கள் செய்கிறார்கள்.

இக்குழுவானது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் அருகிலுள்ள சூலூர் விமானப்படை நிலையத்தில் (Sulur Air Force Station) தளமாகக் கொண்டு இயங்குகிறது. சிங்கப்பூர், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகளின் சர்வதேச வான்சாகசக் காட்சிகளில் இந்தியாவுக்காகப் பெருமை சேர்த்துள்ளது இந்த சாகசக் குழு..

அமெரிக்காவின் பிரெய்ட்லிங் விங்வாக்கர்ஸ், ஸ்கேன்டினேவியன் குழு, செக் நாட்டின் பிளையிங் புல்ஸ், இங்கிலாந்தின் யாக்வ்லவஸ் பார்மேஷன் ஆகியவை வான் வழியாக சாகசம் செய்து வரும் .உலகப் புகழ் பெற்ற ஏரோபேட்டிக்ஸ் அணிகள் இந்த வரிசையில் இந்தியாவின் சாரங் ஏரோபேட்டிக்ஸ் குழுவும் இடம் பெறுகிறது.

இந்திய விமானப்படையின் இளம் ஹெலிகாப்டர் பைலட்டுகள் அடங்கிய சாகசக் குழுதான் சாரங். இவர்கள் சாகசம் செய்ய வானில் புகுந்துவிட்டாலே வானமே அதிரும். வண்ணமயமாக ஜொலிக்கும்.

உலக அளவில் ஹெலிகாப்டர் சாசகக் குழுக்கள் இரண்டுதான் உள்ளன. ஒன்று நமது சாரங், இன்னொன்று இங்கிலாந்து ராணுவத்தின் ப்ளூ ஈகிள்ஸ்.கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பெங்களூரில் உள்ள விமானம் மற்றும் சிஸ்டம்ஸ் சோதனை நிறுவனத்தில் இந்த சாரங் குழு உருவாக்கப்பட்டது. அப்போது இருந்த அட்வான்ஸ்ட் இலகுரக ஹெலிகாப்டரை வைத்து இந்த டீமை உருவாக்கினர். ஸ்குவாட்ரன் லீடர் தீபிகா மிஸ்ரா, 2015-ஆம் ஆண்டில் இதில் சேர்ந்து படைப்பிரிவின் முதல் பெண் விமானியாக சாதனை படைத்தார்.

சாரங் என்றால் சமஸ்கிருதத்தில் மயில் என்று பொருள் வரும். மயில் போல இந்த ஹெலிகாப்டர்களும் வானில் மயில்தோகை போல விரிக்கும் என்பதால் இந்த பெயர்.எங்கிருந்து பார்த்தாலும் இந்த வான மயில் வானில் செய்யும் நர்த்தனம் மனதைக் கொள்ளை கொள்ளும்.

2004 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஆசிய ஏரோஸ்பேஸ் ஏர் ஷோவில்தான் சாரங் குழு தனது முதல் நிகழ்சசியை நடத்தியது. அதன் பின்னர் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் 35 நிகழ்ச்சிகளை அது நடத்தியுள்ளது. அதில் 2005 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு தூதரகத்தில் நடந்த சாகசம்தான் உலக அளவில் அதற்குப் பெரும் பெயரை ஈட்டித் தந்தது.

பெர்லினில் 2008 ஆம் ஆண்டு நடந்த ஷோவின்போது, பெஸ்ட் லுக்கிங் குளோஸ் பார்மேஷன் டீம் என்ற சிறப்பு கிடைத்தது. ஐந்து ஹெலிகாப்டர்கள் மூலம் ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து வரை ஆங்கிலக் கால்வாயை இந்தக் குழுவினர் ஒரு சேர கடந்து அசத்தினர்.

விமானக் கண்காட்சிகள் பொதுவாக வர்த்தகம் தொடர்பான கூட்டங்களாகவும், ராணுவத் தளவாட அணிவகுப்பாகவும் மட்டுமே இருப்பது வழக்கம்.ஆனால் ஏரோ இந்தியா ஷோவானது ஆண்டுக்கு ஆண்டு பல்வேறு சாகசங்களை நிகழ்த்தும் கண்காட்சியாக மாறி வருகிறது. தரையிலும், வானிலும் நடத்தப்படும் இந்த சாகசங்கள் கண்காட்சிக்கு அழகூட்டுகின்றன.

ஆசிய வான்வெளிக் கண்காட்சியில் அனைத்துலக அளவில் அறிமுகம் கண்ட ‘சாரங்க்’ குழு உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் 1,200க்கும் மேற்பட்ட சாகச நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மெய்சிலிர்க்க வைக்கும் சாகசக் காட்சிகள் மட்டுமல்லாது, இடர்கள் நிகழும்போது மக்களின் துயர் களைய உயிர்காக்கும் மீட்புப் பணியிலும் ‘சாரங்க்’ விமானிகள் ஈடுபடுகின்றனர்.

உலகிலேயே முதன்முறையாக ‘ஸ்பாட் ஸ்டால் டர்ன்’ எனப்படும் புத்தம் புதிய வான் சாகச முறையையும் இக்கண்காட்சியில் இந்திய விமானப்படை வீரர்கள் அறிமுகம் செய்தனர். இது உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்து ஆர்வலர்களுக்கு இந்திய விமானப்படையின் துணிச்சலையும், வீரத்தையும் நேரில் காண்பதற்கான ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.

dailythanthi_2026-09-18_8awoin9a_miruthula

“பெண் தலைவர்களுக்கு எதிரான அவதூறு பிரசாரத்தை உடனடியாக நிறுத்துங்கள்!” – சமூக வலைதளத் தாக்குதல்களுக்கு எதிராக சிபிஎம் கண்டனம்

September 18, 2026

சென்னை: இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினருமான

cvshanmugam2

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு; எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் பெயர்கள் புறக்கணிப்பு!

September 18, 2026

சென்னை: அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக

images - 2026-09-18T204101.591

“16 ஆயிரம் பேரை பாதித்த டெங்கு காய்ச்சல்: தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம்!” – சீமான் ஆவேசம்!

September 18, 2026

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் மெத்தனமாகச்

b2994920-4797-11f1-970b-c9a1b7950074.jpg

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தலா 2 நாள்கள் வீதம் முதலமைச்சர் விஜய் 4 நாள்கள் தீவிரப் பிரச்சாரம்!

September 18, 2026

சென்னை: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி)

1

“திமுக சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுத்தனர்; கறுப்புச் சட்டையைக் கழற்றச் சொல்லி அவமானப்படுத்தினர்!” – கே.என். நேருவுக்குத் துரை வைகோ பதிலடி

September 18, 2026

திருச்சி: மதிமுகவை நடத்த முடியாமல் திமுகவில் இணையப் போவதாகத் தன்னிடம் கூறியதாக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு,

1200-675-27662318-thumbnail-16x9-vsb

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை!

September 18, 2026

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்கு நன்கு

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை ஓரிரு நாள்களில் போய்ச் சேரும்; இதில் அரசியல் செய்ய வேண்டாம்!” – அமைச்சர் வன்னி அரசு உறுதி

September 18, 2026

விழுப்புரம்: மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுத் தினத்தையொட்டி திண்டிவனத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த

1200-675-27660976-thumbnail-16x9-mou

தமிழ்நாட்டில் கால்பதிக்கும் அமெரிக்காவின் ‘வால்கிரீன்ஸ்’: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

September 18, 2026

சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமான ‘வால்கிரீன்ஸ்’ (Walgreens), இந்தியாவில்

Edappadi-palanisamy-smile

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 6 நாள்கள் தீவிரப் பிரச்சாரம்!

September 18, 2026

சென்னை: அடுத்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“பஞ்சாபில் 16 மணி நேர மின்வெட்டு; தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு இல்லை!” – அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்

September 18, 2026

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப்

photo-collage.png (1)

மயில் தோகை விரிக்கும் இந்திய விமானப்படையின் ‘சாரங்’ சாகசக் குழு!

September 18, 2026

சாரங் (Sarang) என்பது இந்திய விமானப்படையின் (IAF) புகழ்பெற்ற வான்வழி சாகச ஹெலிகாப்டர் காட்சிக் குழுவாகும். உலகிலேயே ஐந்து ஹெலிகாப்டர்களைக்

sa

சவூதி அரேபியா – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதல்

September 18, 2026

சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த இருமுனைத் தாக்குதல்களில் சிறுவர்கள்