கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் 2.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள், வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட மீட்புப் பணிகளின் முதல் 4 மாதங்களில், வீதிகளை அமைப்பதற்கும், தற்காலிக முகாம்களைக் கட்டுவதற்கும், குடிநீர் வழங்குவதற்கும் மற்றும் மின்சாரத்தை சீரமைப்பதற்கும் மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 52.6 மில்லியன் டொலர்களாக இருக்கும் என தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20,000 வீடுகளை நேபாளம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கும் என்றும், அவற்றில் குறைந்தபட்சம் 7,500 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.