செம்மணியை நினைவுகூர்ந்து லண்டனில் 583 வெள்ளை விரிப்புகளுடன் அமைதிப் போராட்டம்!

கிருஷாந்தி குமாரசுவாமியின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 583 மனித எச்சங்களை நினைவுகூரும் வகையில், லண்டனில் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டன் பிரிம்ரோஸ் ஹில் பூங்காவில் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், 583 வெள்ளைத் துணிகள் பயன்படுத்தப்பட்டு, அவற்றால் உடல்களை முழுமையாக மூடியவாறு பங்கேற்பாளர்கள் தரையில் படுத்திருந்தனர். 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசுவாமி, செம்மணிச் சந்தியில் அமைந்திருந்த இராணுவ சோதனைச் சாவடியில் தடுத்து […]

டொராண்டோவில் தன்னை கருணைக்கொலை செய்யக் கோரிய நடிகை

னநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் […]

செம்மணியில் கிருஷாந்தி உள்ளிட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி குமாரசாமி கிருஷாந்தி உள்ளிட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை மாலை செம்மணியில் நடைபெற்றது. இதன்போது, கிருஷாந்தியுடன் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவுகூரப்பட்டு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996 செப்டம்பர் 7ஆம் திகதி, 18 வயதான கிருஷாந்தி செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அவரைத் தேடி சென்ற அவரது […]

பேஸ்புக் விருந்து; 41 பேர் கைது

தெல்தெனிய விக்டோரியாப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துப் பார்ட்டியின் மீது பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது, 36 ஆண்களும் 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சோதனையின் போது சந்தேக நபர்களிடம் இருந்த பல்வேறு வகையான போதைப்பொருட்களையும் மதுபானங்களையும் பொலிஸார் கைப்பற்றினர். இவற்றுள் 947 மில்லிகிராம் கஞ்சா, 3.657 கிராம் ஹஷிஸ், 1.276 கிராம் ஐஸ் (படிக […]

பேராயர் முக்கிய கோரிக்கை

பாரிய சமூகப் பேரழிவுக்குக் காரணமாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சில போதைப்பொருள் கடத்தல்களுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதால், அத்தகைய செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்குமாறு மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுப்பதாக வலியுறுத்தினார். இன்று (06) பேருவளை பண்டாரவத்தையிலுள்ள புனித லாசர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனைக் குறிப்பிட்டார். சிலரின் குறுகிய நோக்கம் கொண்ட இந்த செயற்பாடுகள் பாரிய […]

தனியார் தேவைக்காக பொது இடத்தை பறிக்க வேண்டாம்

கொட்டகலை, ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, அங்கு மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரொப்கில் தோட்டத்தின் பிரதான நுழைவாயில் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தோட்ட இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறித்த பொது இடம் பல ஆண்டுகளாக இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் திருவிழாக்கள், […]

போதைப்பொருள் தயாரிப்பு; தொலைக்காட்சி தொகுப்பாளினிக்கு மரண தண்டனை

பரந்த அளவிலான போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் வழக்கில், எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளினி சாரா கலிபா (Sarah Khalifa) உட்பட 12 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான ‘மிஷன் இம்பொசிபிள்’ (Mission Impossible) என்ற நிகழ்ச்சியின் மூலம் நன்கு அறியப்பட்ட 39 வயதான இவர், கெய்ரோ நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், “நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் சிகரெட் […]

கச்சா எண்ணெய் திருட முயன்றபோது விஷவாயு தாக்கி 37 பேர் பலி

தெற்கு நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒக்கிரிகா பகுதியில், கச்சா எண்ணெய் குழாயில் இருந்து வெளியேறிய கடுமையான விஷவாயுவைச் சுவாசித்ததில் 37 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சட்டவிரோதமாக எரிபொருளைத் திருட முயன்றபோது இந்த சோக விபத்து நடந்துள்ளது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் நைஜீரியா நாட்டின் டெல்டா பகுதிகளில் கச்சா எண்ணெய் குழாய்கள் அமைத்துள்ளன. மேலும், தெற்கு நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒக்கிரிகா பகுதியின் ஒகாரி ஜெட்டி அருகே பிரதான கச்சா […]

நேபாள வௌ்ளம் – 2.56 பில்லியன் டொலர் சொத்துகளுக்கு சேதம்

கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் 2.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள், வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட மீட்புப் பணிகளின் முதல் 4 மாதங்களில், வீதிகளை அமைப்பதற்கும், தற்காலிக முகாம்களைக் கட்டுவதற்கும், குடிநீர் வழங்குவதற்கும் மற்றும் மின்சாரத்தை சீரமைப்பதற்கும் மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 52.6 மில்லியன் டொலர்களாக இருக்கும் என தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார். வெள்ளத்தால் […]

உலக அழகி 2026 இல் கிரீடம் சூடிய டொமினிக்கன் அழகி

2026ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி வியட்நாமில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ‘உலக அழகி 2026’ பட்டத்தை டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜொஹெய்ரி மொலா வென்றுள்ளார். அவருக்கு 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தெரிவுசெய்யப்பட்ட தாய்லாந்தின் ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார். ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், மலேசியாவின் தானுஷியா செட்டி 2-வது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றனர். தொழில்முறை மொடலான ஜொஹெய்ரி மொலா, இபெரோஅமெரிக்கானா பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவம் […]