சென்னை
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தவெக அரசு மற்றும் மத்திய அரசு குறித்துப் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளையும் கண்டனங்களையும் முன்வைத்தார்.
அவரது பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
நல்லகண்ணு வீடு ஒப்படைப்பு:
-
மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணுவிற்கு அரசு ஒதுக்கிய வீட்டை, அவரது சொந்த விருப்பத்தின் பேரிலேயே மீண்டும் அரசிடமே திரும்ப ஒப்படைக்கிறோம்.
டெல்டா மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம்:
-
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி, வரும் 28-ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்:
-
பணிநிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28-ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் மாபெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
சுற்றறிக்கை விவகாரம்; முதல்வருக்குக் கேள்வி:
-
இடதுசாரி மாணவர் அமைப்புகளைக் கண்காணிப்பது தொடர்பாக வெளியான சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை குறித்து, முதலமைச்சர் விஜய்யும் தலைமைச் செயலாளரும் உடனடியாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
கார் திட்டம் மற்றும் மேகதாது விவகாரம்:
-
எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.
-
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக் கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.
மத்திய அரசுக்குக் கண்டனம்:
-
டெல்லி பேரணிக்காகத் தமிழகத்திலிருந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயிலுக்கு அனுமதி தர மறுத்த மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
#CPI #MVeerapandian #ChiefMinisterVijay #TVKGovernment #MLACarScheme #RNallakannu #TASMACStrike #Mekedatu #DeltaFarmers #StudentPolitics #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates