கனடா முழுவதும் அவசர உதவி தொலைபேசி சேவைகளுக்கான (crisis hotlines) ஆதரவைப் புதுப்பிப்பதற்காக $31 மில்லியன் நிதியுதவியை வழங்குவதற்கு கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, நியூபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடார் (Newfoundland and Labrador) பிராந்தியத்தில் உள்ள அவசர உதவி சேவைகளை வலுப்படுத்துவதற்காக ஐந்து ஆண்டுகளில் $700,000 நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென். ஜோன்ஸில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இப்புதிய நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஜோன் தொம்ப்சன் (Joanne Thompson), அமைச்சர் லீலா எவன்ஸ் (Lela Evans), ‘End Sexual Violence Newfoundland and Labrador’ அமைப்பைச் சேர்ந்த மேரி வால்ஷ் (Mary Walsh), ‘Transition House Association of Newfoundland and Labrador’ அமைப்பைச் சேர்ந்த டான் மீட்ஸ் (Dan Meades) உட்பட பல முன்னிலைப் பணியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அவசர உதவி தொலைபேசி ஊழியர்கள் மற்றும் பாதிப்புகளிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் (survivors) பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், “ஒருவர் உதவி கேட்டுத் தொடர்புகொள்ளும்போது, அவருக்குப் பதிலளிக்க நிச்சயம் ஒருவர் இருப்பார் என்பதை அவர் அறிந்துகொள்ளத் தகுதியானவர். தப்பிப்பிழைத்தவர்கள் தங்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் உரிய ஆதரவைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்காக, நமது அரசாங்கம் மாகாணங்கள், பிரதேசங்கள், பழங்குடியினப் பங்காளிகள் மற்றும் முன்னிலைப் பணியாளர்கள் அமைப்புகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும்” எனத் தெரிவித்தார்.