கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணமடு குளத்துப் பகுதியில் இன்று (03) திங்கட்கிழமை எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இரணைமடு குளத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேட்கொண்டவர்களினால் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸ் நிபுணர்கள் வருகை தந்து சான்றுகளைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தை மாவட்ட நீதிபதி பார்வையிட்ட பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகவும், உயிரிழந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
குறித்த சம்பவம் திட்டமிட்ட கொலையா அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Local News