22ஆவது திருத்தத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக சகல நீதிமன்றங்களின் நீதிபதிகள் சேவையில் இருந்து ஓய்வுப்பெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கிகாரத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய அரசியலமைப்பின் 22 ஆம் திருத்த சட்டவரைவுக்கான ஆவணங்கள் சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார முன்வைத்த விசேட அமைச்சரவை யோசனைக்கு அமைக்கு சகல நீதிபதிகளினதும் பதவி காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமைச்சரவை அனுமதியளித்தது.

இந்த அமைச்சரவை பத்திரத்துக்கமைய, உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவி காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கும் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிபதிகளின் பதவி காலத்தை நீட்டிப்பதற்காக நீதிமன்ற சட்டத்தை திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் 107(5) பிரிவின் பிரகாரம் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுப்பெறும் வயதெல்லை 65 ஆக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், புதிய யோசனைக்கு அமைய வயதெல்லை 67 ஆக நீட்டிக்கப்படவுள்ளது.

அந்தச் சட்டத்தின் இணைப்பிரிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுப்பெறும் வயதெல்லை 63 ஆக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், புதிய யோசனைக்கு அமைய வயதெல்லை 65 ஆக நீட்டிக்கப்படவுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் தற்போது ஓய்வுப்பெறும் வயதெல்லை 61 ஆகவும், நீதிவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஓய்வுப்பெறும் வயதெல்லை தற்போது 60 ஆக காணப்படுகிறது. தற்போதைய புதிய யோசனைக்கு அமைய மேல் மற்றும் கீழ் நிலை நீதிமன்றங்களின் சகல நீதிபதிகளினதும் பதவி காலம் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்படவுள்ளது.

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவி காலத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தில் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாவட்ட நீதிமன்ற சங்கங்கள், நீதிச்சேவை சங்கம் உட்பட நீதித்துறையுடன் தொடர்புடைய சகல தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள பின்னணியில் அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சட்டத்தரணிகள் சங்கம் கடந்த வாரம் விசேட பொதுச்சபை கூட்டத்தை நடத்தி விசேட யோசனையை நிறைவேற்றி, அரசாங்கத்திடம் பல திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை